Post by jksivan on Dec 6, 2013 4:41:59 GMT 5.5
அன்பு நண்பர்களே
மார்கழி நெருங்குகிறது. இந்த மகத்தான மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய ஒரு சிறு கதைத்தொகுப்பை எழுதியிருக்கிறேன். உங்களில் யாரேனும் விரும்பினால் இதை ஒரு புத்தக வடிவில் அமைத்து மார்கழி முடியுமுன் பெருமாள் ஆலயங்களில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இலவசமாக வழங்க உத்தேசம். யார் கை கொடுக்கப்போகிறீர்கள் என்பதை டிசம்பர் 15க்குள் தெரியப்படுத்துங்கள். கிட்டத்தட்ட 60 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இது வரலாம். படங்களுடன் 10-15 பக்கங்கள் கூடலாம். வண்ணத்தில் அமைத்தால்
கெட்டியான ஆர்ட் காகிதத்தில் தான் அச்சிட வேண்டும். இதற்கான செலவு ஏறக்குறைய ரூபாய் 30-35 ஆயிரம் ஆகும் என்று சொல்கிறார்கள்.? கருப்பு வெள்ளையில் போட்டால் கொஞ்சம் குறையும். எதில் அச்சிடலாம்? திட்டம் நிறைவேறுமா? இதெல்லாம் என் கையில் இல்லை. அந்த ஆண்டாள் கிருபையிலும் அவள் மூலமாக உங்களில் யாரோ /சிலரோ முடிவெடுக்க நேரிடலாம்.
நேரே கதைக்கு செல்கிறேன்:
மார்கழி விருந்து
நம்மில் யாருக்கேனும் நமது தேசம் ஒரு புண்ய பூமி தான் என்பதில் துக்குணியூண்டேனும் சந்தேகம் இருக்குமானால் கொஞ்சநாள் பாகிஸ்தானிலோ இரான் இராக்கிலோ அல்லது எங்கோ ஒரு நாட்டில் இருந்து விட்டு மீண்டும் இங்கே வரவும். யாரும் சொல்லாமலே தானே தெரியவரும். இந்த புண்ய தேசம் இவ்வாறு பரிமளிக்க யார் காரணம், எது காரணம்? வாழ்ந்த நம் மூதாதையரும், வணங்கிய தெய்வங்களும், நலமோடு வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் தான். இயற்கையோ அன்று போல் இன்றும் இருக்கிறதே தவிர அதை வெறுத்து சின்னா பின்னமாக்கி நாகரிகம் என்ற போர்வையில் நாமே உண்டாக்கிக்கொண்ட குளிரில் வாடுகிறோம்.
பின்னோக்கி செல்வோம். பண்பையும் பக்தியையும் ருசிப்போம். குளிர் என்று சொன்னவுடனே மார்கழி கவனத்துக்கு வருகிறதே மார்கழி பற்றியே ஆரம்பிப்போமே.மார்கழி என்ற வுடனேயே என்ன தோன்றுகிறது ''மார்கழி திங்கள் என்ற பாடல் மட்டும் போதும், மடி நிறைய பொங்கல் வேண்டாம். ஒரு தொன்னையே போதும். பிரசாதம் உணவல்ல. இறை அருள் பெற விழைய, ஒரு தூண்டு கோல்.
மார்கழியை மணக்க வைத்த மா மனிதை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் எட்டிய தூரத்தில் என்றும் நம் கண் முன்னே நின்று, மனத்தை ஆக்ரமிக்கும் பெண் தெய்வம். பெருமாள் இருக்கும் இடமெல்லாம் ஒரு சந்நிதியில் தானும் நமக்காக அருள்பவள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என்று சொல்கிறவர்களும் உண்டு. கண்ணன் இருந்த காலத்தில் தானும் வாழ்ந்ததாக தானே ஒரு காட்சி அமைத்து மனத்தில் வாழ்ந்து நம் மனத்தில் இடம் பிடித்தவள் ஆண்டாள். வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தில் துளசியோடு துளசியாக பெரியாழ்வார் கண்டெடுத்த, அவதரித்த, கோதை எனும் பெயர் பெற்றவள்.
அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு பூச்சூட ஒரு பெரும் நந்தவனமே வளர்த்த பெரியாழ்வார் தனது வழியிலேயே சுடர்க்கொடியை வளர்த்தார். தமிழ் கலந்த பக்தியை வளர்ப்பு மகளுக்கு ஊட்டினார். தேனிலே ஊரினவள் தேனான பாசுரங்களை இயற்ற வழிகாட்டினார். தனக்குத் தெரிந்த சாஸ்திரம், வேதம்,பக்தி மார்க்கம், தீஞ்சுவைத் தமிழில் கலந்து அவளைப் பக்குவப் படுத்தினார். திருப்பாவை பிறந்தது.
திருப்பாவை 30 பாசுரங்களையும் கோதைநா ச்சியார் எழுதியபோது தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகப் படுத்திகொண்டு அந்த இடைச்சிறுமிகளோடு பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.
மார்கழி 30 நாளும் ஒருநாளைக்கு ஒன்றாக அந்த பாசுரங்களை தொடர் நிகழ்ச்சியாக தொகுத்து அந்த சிறுமியர்களின் பேச்சு வாயிலாக திருப்பாவை பாசுரங்கள் இந்த குட்டி கதைப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதைக் கையாண்ட விதத்தை பற்றி சொல்லும்போது ஆண்டாள் என்பவள் ஆயர்பாடி இடைச்சிறுமிகளில் ஒருவளாகவும் அதே நேரம் வில்லிப்புத்தூரில் சிறந்த விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள் கோதையாகவும் ஒரே சமயத்தில் அறிமுகமாகிறாள்
மார்கழி நெருங்குகிறது. இந்த மகத்தான மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய ஒரு சிறு கதைத்தொகுப்பை எழுதியிருக்கிறேன். உங்களில் யாரேனும் விரும்பினால் இதை ஒரு புத்தக வடிவில் அமைத்து மார்கழி முடியுமுன் பெருமாள் ஆலயங்களில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இலவசமாக வழங்க உத்தேசம். யார் கை கொடுக்கப்போகிறீர்கள் என்பதை டிசம்பர் 15க்குள் தெரியப்படுத்துங்கள். கிட்டத்தட்ட 60 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இது வரலாம். படங்களுடன் 10-15 பக்கங்கள் கூடலாம். வண்ணத்தில் அமைத்தால்
கெட்டியான ஆர்ட் காகிதத்தில் தான் அச்சிட வேண்டும். இதற்கான செலவு ஏறக்குறைய ரூபாய் 30-35 ஆயிரம் ஆகும் என்று சொல்கிறார்கள்.? கருப்பு வெள்ளையில் போட்டால் கொஞ்சம் குறையும். எதில் அச்சிடலாம்? திட்டம் நிறைவேறுமா? இதெல்லாம் என் கையில் இல்லை. அந்த ஆண்டாள் கிருபையிலும் அவள் மூலமாக உங்களில் யாரோ /சிலரோ முடிவெடுக்க நேரிடலாம்.
நேரே கதைக்கு செல்கிறேன்:
மார்கழி விருந்து
நம்மில் யாருக்கேனும் நமது தேசம் ஒரு புண்ய பூமி தான் என்பதில் துக்குணியூண்டேனும் சந்தேகம் இருக்குமானால் கொஞ்சநாள் பாகிஸ்தானிலோ இரான் இராக்கிலோ அல்லது எங்கோ ஒரு நாட்டில் இருந்து விட்டு மீண்டும் இங்கே வரவும். யாரும் சொல்லாமலே தானே தெரியவரும். இந்த புண்ய தேசம் இவ்வாறு பரிமளிக்க யார் காரணம், எது காரணம்? வாழ்ந்த நம் மூதாதையரும், வணங்கிய தெய்வங்களும், நலமோடு வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் தான். இயற்கையோ அன்று போல் இன்றும் இருக்கிறதே தவிர அதை வெறுத்து சின்னா பின்னமாக்கி நாகரிகம் என்ற போர்வையில் நாமே உண்டாக்கிக்கொண்ட குளிரில் வாடுகிறோம்.
பின்னோக்கி செல்வோம். பண்பையும் பக்தியையும் ருசிப்போம். குளிர் என்று சொன்னவுடனே மார்கழி கவனத்துக்கு வருகிறதே மார்கழி பற்றியே ஆரம்பிப்போமே.மார்கழி என்ற வுடனேயே என்ன தோன்றுகிறது ''மார்கழி திங்கள் என்ற பாடல் மட்டும் போதும், மடி நிறைய பொங்கல் வேண்டாம். ஒரு தொன்னையே போதும். பிரசாதம் உணவல்ல. இறை அருள் பெற விழைய, ஒரு தூண்டு கோல்.
மார்கழியை மணக்க வைத்த மா மனிதை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் எட்டிய தூரத்தில் என்றும் நம் கண் முன்னே நின்று, மனத்தை ஆக்ரமிக்கும் பெண் தெய்வம். பெருமாள் இருக்கும் இடமெல்லாம் ஒரு சந்நிதியில் தானும் நமக்காக அருள்பவள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாள் என்று சொல்கிறவர்களும் உண்டு. கண்ணன் இருந்த காலத்தில் தானும் வாழ்ந்ததாக தானே ஒரு காட்சி அமைத்து மனத்தில் வாழ்ந்து நம் மனத்தில் இடம் பிடித்தவள் ஆண்டாள். வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தில் துளசியோடு துளசியாக பெரியாழ்வார் கண்டெடுத்த, அவதரித்த, கோதை எனும் பெயர் பெற்றவள்.
அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு பூச்சூட ஒரு பெரும் நந்தவனமே வளர்த்த பெரியாழ்வார் தனது வழியிலேயே சுடர்க்கொடியை வளர்த்தார். தமிழ் கலந்த பக்தியை வளர்ப்பு மகளுக்கு ஊட்டினார். தேனிலே ஊரினவள் தேனான பாசுரங்களை இயற்ற வழிகாட்டினார். தனக்குத் தெரிந்த சாஸ்திரம், வேதம்,பக்தி மார்க்கம், தீஞ்சுவைத் தமிழில் கலந்து அவளைப் பக்குவப் படுத்தினார். திருப்பாவை பிறந்தது.
திருப்பாவை 30 பாசுரங்களையும் கோதைநா ச்சியார் எழுதியபோது தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகப் படுத்திகொண்டு அந்த இடைச்சிறுமிகளோடு பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.
மார்கழி 30 நாளும் ஒருநாளைக்கு ஒன்றாக அந்த பாசுரங்களை தொடர் நிகழ்ச்சியாக தொகுத்து அந்த சிறுமியர்களின் பேச்சு வாயிலாக திருப்பாவை பாசுரங்கள் இந்த குட்டி கதைப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதைக் கையாண்ட விதத்தை பற்றி சொல்லும்போது ஆண்டாள் என்பவள் ஆயர்பாடி இடைச்சிறுமிகளில் ஒருவளாகவும் அதே நேரம் வில்லிப்புத்தூரில் சிறந்த விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள் கோதையாகவும் ஒரே சமயத்தில் அறிமுகமாகிறாள்