|
Post by Amritha Varshini on Mar 28, 2024 5:48:59 GMT 5.5
உ
ஸ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி லதா ஸ்ரீதரன்
ராகம் - குந்தலவராளி ; ஏக தாளம்
பல்லவி
வாழ்க்கைப்படியில் உயர்ந்திடவே நாம் ஏணிப்படிகளில் ஏறிடுவோம்
சரணம்
ஏன் இப்படி மனிதர்கள் என வியந்தார் ஏணிப் படிகளில் மாந்தர்கள் நல்லுரை தந்தார் ஊனினை உருக்கிடும் வாசகம் பல நவின்றார் நான் அழித்திடும் தத்துவத்தை புரிய வைத்தார்
( வாழ்க்கைப்படியில் )
தர்மநெறி தவறாமல் சொல்லிடும் வழிகாட்டி கர்மநெறி பிறழாமல் செய்திடும் அறிவூட்டி வாழ்க்கைப் படகை கரைசேர்க்கும் படகோட்டி தொழுது வணங்கிடுவோம் அவர் பதம் உணர்வூட்டி
( வாழ்க்கைப்படியில் )
|
|