|
Post by Amritha Varshini on Mar 2, 2024 17:31:41 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல் ( தை அனுஷம் – 04-02-2024 )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் – பிருந்தாவன சாரங்கா ; ஆதி தாளம்
பல்லவி
துணை வருவாய் தூயவனே துய்ய நின் பதம் தருவாய் மாயவனே
அனுபல்லவி
அஞ்சல் அளித்திடும் காஞ்சி வரதனே சஞ்சலம் நீக்கிடும் காமகோடி சங்கரனே
( துணை வருவாய் )
சரணம்
அறிவற்று நான் அரற்றி வந்தேன் செருக்குற்று நான் உலவி வந்தேன் அயர்வாகி உனை அணுகி நின்றேன் அன்னை நீயென உணர்ந்து கொண்டேன்
( துணை வருவாய் )
உயர்வாகி உனை அறிந்து கொண்டேன் உண்மை யாதென தெரிந்து கொண்டேன் செஞ்சுடர் திருமேனி கண்டு கொண்டேன் சென்னியில் (நின்) பாதம் வைத்து விட்டேன்
( துணை வருவாய் )
|
|