Post by Amritha Varshini on Jan 12, 2024 4:46:59 GMT 5.5
திருப்பள்ளி எழுச்சி - நங்கநல்லூர் J K SIVAN
மணிவாசகர்
மார்கழி 26ம் நாள்
பாடல் எண் : 06
''பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!''
திருவாசகர் மணிவாசகரையும் திருப்பெருந்துறையும் நகமும், சதையும் போல், உடலும், உயிரும் போல் ஒன்றோடொன்று இணைந்தவை. பிரிக்க முடியாதவை. திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் சிற்பக்கலை அழகை அப்பப்போ கொஞ்சம் சொல்லிக்கொண்டு தானே இருக்கிறேன். ஆவுடையார் ஆத்மநாத ஸ்வாமியை துயிலெழச் செய்யும் பாடல்கள் தான் திருப்பள்ளி எழுச்சி. மொத்தம் 10 பாடல்கள் அதில் 6 இன்றுடன் சேர்த்து அனுபவிக்க நாம் பாக்கியசாலிகள்.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குரு மூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.
இனி மேலே சொன்ன திருப்பள்ளி எழுச்சி பாடலில் விளக்கம் அறிவோம்:
'உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. ''
மணிவாசகர்
மார்கழி 26ம் நாள்
பாடல் எண் : 06
''பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!''
திருவாசகர் மணிவாசகரையும் திருப்பெருந்துறையும் நகமும், சதையும் போல், உடலும், உயிரும் போல் ஒன்றோடொன்று இணைந்தவை. பிரிக்க முடியாதவை. திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் சிற்பக்கலை அழகை அப்பப்போ கொஞ்சம் சொல்லிக்கொண்டு தானே இருக்கிறேன். ஆவுடையார் ஆத்மநாத ஸ்வாமியை துயிலெழச் செய்யும் பாடல்கள் தான் திருப்பள்ளி எழுச்சி. மொத்தம் 10 பாடல்கள் அதில் 6 இன்றுடன் சேர்த்து அனுபவிக்க நாம் பாக்கியசாலிகள்.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும். சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குரு மூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன், சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.
இனி மேலே சொன்ன திருப்பள்ளி எழுச்சி பாடலில் விளக்கம் அறிவோம்:
'உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. ''