Post by Amritha Varshini on Jan 11, 2024 5:48:02 GMT 5.5
இன்று மார்கழி மூலம் 🙏
**********************
ஹனுமானுக்கு யஜுர்வேதம் தெரியுமா ?
************************
கிஷ்கிந்தா காண்டம் –
கிஷ்கிந்தாகாண்டத்தில் ஸ்ரீராமலக்ஷ்மணர்கள் பிராட்டியைத் தேடி, கிஷ்கிந்தைக்கு அருகில் பம்பை வனத்திற்கு வருகின்றனர். அவர்களை அண்ணன் வாலிதான், தன்னைக் கொல்ல அனுப்பியிருக்கலாம் என்று சுக்ரீவரும் சந்தேகம் கொள்கிறார். உண்மையை அறிய ஹனுமான் ஒரு பிக்ஷுரூபத்தில் மாறுவேடத்தில், ஸ்ரீராமலக்ஷ்மணர்களிடம் , தன்னுடைய தூதுவராக அனுப்புகிறார்.
3 ஆம் சர்கத்தில், ஹனுமானும் வந்து, நீங்கள் யார்? எதற்காக யாராலும் புக முடியாத வனத்திற்கு வந்தீர்கள் என்றெல்லாம் வினவுகிறார். அவர் சுருக்கமாகவும் இன்றி விரிவாகவும் இன்றி, மத்யம ஸ்வரத்தில், எந்தவித முகத்தில் /உடலில் சேஷ்டைகள் இன்றி, மனத்தைக் கவரும் குரலில், அழகிய மங்களகரமான சொற்களில், திக்காமலும், யோசிக்காமலும் ,அழகிய உச்சரிப்புடன், ஒரு மந்திரிக்குரிய மதிநுட்பத்துடன் பேசுகிறார்.
அவருடைய பேச்சில் மயங்கிய ஸ்ரீராமர் பேசிய முதல் ஸ்லோகம் பின்வருமாறு.
நாந் ருக் வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண: |
நா ஸாம வேத விதுஷ சக்யம் ஏவ அபிபாஷிதும் ||
ரிக்வேதம் தெரியாமல் ஒருவரால் இப்படி பேச முடியாது என்று பாராட்டுகிறார். அதனை முதல் பாகத்தில் பார்த்த நாம் இபொழுது இரண்டாம் பாகத்தில் ஹனுமானுக்கு யஜுர்வேதம் தெரியும் என்பது ஸ்ரீராமருக்கு எவ்வாறு தெரிந்தது என்னும் இரண்டாம் கேள்விக்கு விளக்கம் பின்வருமாறு.
“நா யஜுர்வேத தாரிண :” என்னும் சொற்றொடரிலிருந்து யஜுர்வேதம் பயிலவும், ஒதவும், ஒருவருக்கு தாரணஶக்தி இன்றியமையாதது என்பதனை உணரலாம்.
எடுத்துக்காட்டாக யஜுர்வேத ஶாந்தி மந்திரம் பார்ப்போம்:
அதனை தொடங்கும் பொழுது
த்வமேவ: ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி, ரிதம் வதிஷ்யாமி என்று காணப்பெறும்.
முடிவில்
த்வாமேவ: ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மா வாதிஷம், சத்யமவாதிஷம், ரிதமவாதிஷம் என்று மாறியவாறு வரக் காணலாம். இது வெறுமனே இருமுறை தான்.
ஆனால் 5 முறை, 4 முறை ஒரேமாதிரி வந்து குழப்பும் பகுதிகள் தான் யஜுர்வேதத்தில் பெரும்பாலும் இடம்பெறும்.
உதாரணமாக அதிலோகம், அதிஜ்யௌதிஷம், அதிவித்யம் அதிப்ரஜமம் அத்யாத்மம் என்னும் 5 உத்தேசங்களை(விஷயங்களை) பூர்வரூபம், உத்தரரூபம் ,சந்தி, சந்தானம் என்று விவரிக்கும் இடமும், சதஸ்ரததுர்தா வயாஹ்ருதய: என்று பூ:, புவ:, ஸ்வ:, மஹ: என்று விரியும் பகுதி 4 முறையும் வருவனவாம்.
சேவிக்கையில் சிறிது கவனம் தப்பினாலும், தவறுகள் நிகழலாம்.
அவ்வளவு ஏன் ! ஆழ்வார் அருளிச் செய்யும்பொழுது ஒரேயொரு திருவாய்மொழியிலேயே கூட 3 அல்லது 4 பாசுரங்களில் ஒரே எதுகையினை கையாண்டிருப்பார். இதனால் தொடக்கநிலையிலிருப்போர் சேவிக்க சிரமப்படுவது வழக்கமே. சில அடிகளே கூட திரும்பவும் பயின்று வரலாம். சில அடிகளில் பெருமளவு ஒத்திருக்கலாம். எனவே கவனமாக சேவிக்கவேண்டும்.
உதாரணமாக
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ?,
கடல்ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்
கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றனவே?
இதேபோலத்தான் ஹனுமான் சில ஸ்லோகங்களால் ஸ்ரீராமலக்ஷ்மணர்களிடம் உரையாடுகின்றார். எனவேதான் ஸ்ரீராமரும் அவரை, “ந யஜுர்வேத தாரிண: “ (யஜுர்வேதம் தெரியாத ஒருவரால் இப்படிப் பேச இயலாது) என்று பாராட்டுகின்றார்.
மேலும் தைத்தீரிய உபநிஷதம் “அஜாயமான: பஹுதா விஜாயதே” என்கிறது .. (பிறப்பில்லாத திருமால்; பல படிகளாகப் மீனோடு ஆமை கேழல் கோள் அரியாய் என்று பலபடியாகப் பிறக்கிறான்) என்பது பொருள் !
இங்கும் ஹனுமான் தசரதகுமாரர்களைப் பார்த்து –“ நீங்கள் இருவரும் ராஜகுமாரர்கள் போலிருக்கின்றீர்கள். இந்தக் காட்டில் வந்து கஷ்டப்பட என்ன காரணம் என்று கேட்கின்றார்.
சந்திர சூரியர்கள் போலக் காணப்படும் நீங்கள் இந்தக் காட்டில் பெருமூச்சு விட்டுக்கொண்டு, ஒவ்வொரு மரமாக எதையோ தேடுகின்றீர்களே என்றார்.
(தனக்கு அவர்களை ஆதிசேஷன் ஸஹிதரான திருமால் என்று தெரிந்துவிட்டதை பூடகமாகக் காட்டுகிறார். தன் குட்டு வெளிப்பட்டதை சக்கரவர்த்தி திருமகனாரும் இளையாழ்வாரிடம் வெளிப்படுத்தும் இடமே இதுதான்.
இந்த “அஜாயமான: பஹுதா விஜாயதே” என்னும் வேத வாக்கியத்தினை பலதடவைகளில், பலவிதமான உதாரணங்களுடன் திரும்பத் திரும்பக் கேட்கின்றார்.
ராஜர்ஷி தேவப்ரதிமௌ தாபஸௌ சம்ஶிதவ்ரதௌ -3-5
பொருள்:- தவசிகளின் தோற்றத்தில் இருக்கின்றீர்கள். கடுமையான நியமங்களைக் கடிப்பிடிப்பவர் போன்றும் காணப்படுகின்றீர்கள். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
(இறப்பே இல்லாத நீ, கர்மமடியாக நாங்கள் பிறந்தும் இறந்தும் உழலும் இந்த ஸம்சாரமாகிய பூலோகத்தில் எப்படி வந்தாய்?)
தைர்யவந்தௌ ஸுவர்ணாபௌ கௌ யுவாம் சீரவாரஸௌ -3-7
பொருள்:- மிகவும் மனவுறுதி படைத்தவர்கள் போலக் காணப்படுகின்றீர்கள். பொன்னிற மேனியரான நீங்கள், எப்படி மரவுரி தரிக்கலாம் ?
(சுத்த சாத்வீக திருமேனி உடைய நீ எப்படி இந்த ராஜசமும்/தாமசமும் கலந்த அசுத்த சாத்வீகமான (மிஶ்ரசத்வம்) ப்ரக்ருதி மண்டலத்தில் பிறந்தாய் ?)
ஹஸ்திஹஸ்தோபம புஜௌ த்யுதிமந்தௌ நரர்ஷபௌ -3-10
பொருள்:- நீங்கள் மிகுந்த உடலழகும், அவ்வுடலிலிருந்து தேககாந்தியும் ப்ரகாசிக்கக் கொண்டவர்கள் ஆவீர்கள்.யானையின் துதிக்கை போன்ற புஜங்களை உடையவர்கள். ஒளிவீசும் புருஷோத்தமர்கள்.
(தேவர்களுக்குத்தான் ஒளிவீசும் தேகம் உண்டு. மனிதர்களான உங்களுக்கு எவ்வாறு ஒளிவீசும் தேகம் கிடைத்தது ?
மனப்பரிபோடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,
தனக்கு ஒரு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்,
புனத்துழாய் முடிமாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினி யார் நிகர் நீணிலத்தே?
என்பது போலவாம்)
ராஜ்யார்ஹௌ அமரப்ரக்யௌ கதம் தேஶம் இஹாகதௌ -3-12
பொருள்:-இந்தபூமண்டலம் முழுதும் அரசாட்சி செய்யும் யோக்யதையினை உங்களிடம் காண்கிறேன். தேவர்களைப் போல விளங்குகின்றீர்கள். பின்பு ஏன் காட்டிற்கு வந்தீர்கள் ?
(வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி புஷ்கரிணீ தடே |
ரமயா ரமமாணாய வேங்கடேஶாய மங்களம் ||
என்னும் “வைகுண்டத்தினை விட்டு திருவேங்கடம் வந்த திருமகளுடன் கூடிய ஸ்ரீநிவாசனே உனக்கு மங்களம் என்பது போலிருகின்றது.
ஸர்வபூஷண பூஷார்ஹா கிமர்தம் ந விபூஷிதா: -3-15
பொருள்:- அனைத்து அணிகலங்களையும் அணியத்தக்க பேரழகான உடலுறுப்புக்களைக் கொண்ட நீங்கள் ஏன் ஒரு அனிகலனைக் கூட அணியாமல் வெறுந்தேகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றீர்கள் ?
(தாஸாம் ஆவிரபூத் ஸௌரி : ஸ்மயமாந முகாம்புஜ:
பீதாம்பரதர ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மன்மத மன்மத :
“அந்த கோபிகைகளுக்கு இடையில் மஞ்சள் பட்டும், வனமாலையும், ஹாரமும், தோடும், வளையும், கிரீடமும்,மகர குண்டலமும் தரித்து மன்மதனுக்கே ஒரு மனமதன் போல விளங்கும் கண்ணன் எம்பெருமான் தோன்றினான்” என்னும் ஸ்ரீமத்பாகவத ஸ்லோகம் போலவும் உளது)
விஶாலவக்ஷஸௌ வீரௌ மாநுஷௌ தேவரூபிணௌ -3-17
பொருள்:-அகன்ற மார்பு கொண்ட மனிதர்களாக இருந்தாலும், உங்கள் தோற்றமும் வீரமும் தேவர்களைப் போன்றதாக இருக்கின்றது.
(ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந :
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரிம் :
வைகுண்டத்தில் நித்யசூரிகளுக்கு நாதனானவன், திருமகள் கேள்வன், பாற்கடலில் அறிதுயில் கொள்பவன், அந்த அனந்தனின் படுக்கை விட்டு இங்கு மதுரைப்பதியில் அவதரித்தான் என்னும் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம் போலும் உளது)
மேலும் யஜுர்வேதத்தின் வேதாதி என்னும் ஸ்லோகம் இதோ !
இஷேத்வோர்ஜே த்வா வாயவஸ்தோ பாயவஸ்தோ
தேவோ வ: ஸவிதா ப்ரார்பயது ஶ்ரேஷ்ட தமாய கர்மணே
இதுதான் முழு 81 ஶாகைகளாகப் பணைத்த யஜுர்வேதம் சொல்லும் கருத்தினை சுருக்கிச் சொல்லும் முதல் ஸ்லோகமாகும்.
இதனை மேலும் சுருக்கினால் வரும் வ்யாஹ்ருதி எழுத்துதான் “புவ:” என்பதாகும். இது தேவலோகங்களையும், அங்கு காணும் செல்வங்களும், அவற்றை அடைவிக்கும் ஜ்யோதிஷ்டோமம் போன்ற வழிகளையும் குறிக்கும்.
அதன்படியே தேவலோக விஷயங்களை குறிக்கும் ஸ்லோகம் பின்வருமாறு
யத்ருச்சயா ஏவ ஸம்ப்ராப்தௌ சந்த்ரசூர்யௌ வசுந்தராம் -3-13
பொருள்:-எதிர்பாடாதவிதமாக ம்ண்ணுலகை அடைந்த சூரிய சந்திரர்களைப் போல இருக்கின்றீர்கள்.
அன்யோன்ய ஸ்த்ருஸௌ வீரௌ தேவலோகௌ இஹாகதௌ -3-12
பொருள்:-மனவலிமை பெற்ற வீரர்களாகிய நீங்கள் தேவலோகத்திலிருந்து இந்த காட்டிற்கு வந்துவிட்டவர்கள் போலுளது.
இமே ச தநுஷீ சித்ரே ஶ்லக்ஷ்ணே சித்ராநுலேபணே |
ப்ரகாஶேதே யதேந்த்ரஸ்ய வஜ்ரே ஹேமவிபூஷிதே || -3-16
பொருள்:- உங்களுடைய விற்கள் இரண்டும் அற்புதமாக இருக்கின்றன. பளிச்சென்று ஒளிவீசிக் கொண்டு, நறுமணப் பூச்சுக்கள் பூசப்பட்டும் விளங்குகின்றன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்திரனுடைய இரண்டு வஜ்ராயுதங்களைப் போன்று விற்கள் அற்புதமாக இருக்கின்றன.
யஜுர்வேதத்தில் ஒரு விஷயத்தினை விளக்க திரும்பத் திரும்ப பல்வேறு உதாரணங்கள் எடுத்தாளப்படுதல் போன்று அனுமனும் பேசினார். அவற்றை நல்ல தாரணஶக்தி இருந்தால் மட்டுமே ஓதவும், பயிலவும் முடியும்.
எனவே தான் ஸ்ரீராமரும், ஹனுமானை – “இவன் யஜுர்வேதம் முழுதுமாகத் தெரிந்தவன்” என்று ஆச்சரியமாகப் பாராட்டுகின்றார்.
[குறிப்பு:- யஜுர்வேதத்தினை பகுத்த வ்யாசர், அதனை தம் சிஷ்யரான வைஶம்பாயனரிடம் பொறுப்பாக அளித்தார். அவரிடம் மனஸ்தாபம் கொண்ட சிஷ்யரான யாக்ஞவல்க்யர், தாம் கற்ற யஜுர்வேதத்தினை குருவிடமே கக்கிவிட்டார். அவற்றை மற்ற சீடர்கள் தித்திரியப் பறவைகளாக உருமாறி விழுங்கி ஸ்வீகரித்தனர். எனவே அந்தப் பகுதிகள் தைத்தீரியம் எனவும் கிருஷ்ண யஜுர்வேதம் எனவும் வழங்கப் பெறும்.
பின்னர் யாக்ஞவல்க்யர், சூரியபகவான் மீது தவம் புரிந்து அவரிடமே யஜுர்வேதங்களைக் கற்றார். இது ஶுக்ல யஜுர்வேதம் எனப்படும்.
அவ்வாறே ஹனுமனும் சூரியபகவானிடமிருந்தே முழு வேத, வேதாந்தங்களையும் கற்றார். இறுதி வரையில் குருவுக்கே கைங்கர்யம்/தொண்டு செய்வது என்று நைஷ்டீக வ்ரதம் பூண்டார். ஆனால் சூரியன் அவர தன் மகனான சுக்ரீவனிடம் சென்று சேரச் செய்தார். சுக்ரீவனும் பின்னர் சக்கரவர்த்தி திருமகனிடம் அவரை கொடுத்து விட்டார்.]
🌹🌹🌹🌹🌹🌹🌹
ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீரங்கமன்னார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்.
**********************************************************************
**********************
ஹனுமானுக்கு யஜுர்வேதம் தெரியுமா ?
************************
கிஷ்கிந்தா காண்டம் –
கிஷ்கிந்தாகாண்டத்தில் ஸ்ரீராமலக்ஷ்மணர்கள் பிராட்டியைத் தேடி, கிஷ்கிந்தைக்கு அருகில் பம்பை வனத்திற்கு வருகின்றனர். அவர்களை அண்ணன் வாலிதான், தன்னைக் கொல்ல அனுப்பியிருக்கலாம் என்று சுக்ரீவரும் சந்தேகம் கொள்கிறார். உண்மையை அறிய ஹனுமான் ஒரு பிக்ஷுரூபத்தில் மாறுவேடத்தில், ஸ்ரீராமலக்ஷ்மணர்களிடம் , தன்னுடைய தூதுவராக அனுப்புகிறார்.
3 ஆம் சர்கத்தில், ஹனுமானும் வந்து, நீங்கள் யார்? எதற்காக யாராலும் புக முடியாத வனத்திற்கு வந்தீர்கள் என்றெல்லாம் வினவுகிறார். அவர் சுருக்கமாகவும் இன்றி விரிவாகவும் இன்றி, மத்யம ஸ்வரத்தில், எந்தவித முகத்தில் /உடலில் சேஷ்டைகள் இன்றி, மனத்தைக் கவரும் குரலில், அழகிய மங்களகரமான சொற்களில், திக்காமலும், யோசிக்காமலும் ,அழகிய உச்சரிப்புடன், ஒரு மந்திரிக்குரிய மதிநுட்பத்துடன் பேசுகிறார்.
அவருடைய பேச்சில் மயங்கிய ஸ்ரீராமர் பேசிய முதல் ஸ்லோகம் பின்வருமாறு.
நாந் ருக் வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண: |
நா ஸாம வேத விதுஷ சக்யம் ஏவ அபிபாஷிதும் ||
ரிக்வேதம் தெரியாமல் ஒருவரால் இப்படி பேச முடியாது என்று பாராட்டுகிறார். அதனை முதல் பாகத்தில் பார்த்த நாம் இபொழுது இரண்டாம் பாகத்தில் ஹனுமானுக்கு யஜுர்வேதம் தெரியும் என்பது ஸ்ரீராமருக்கு எவ்வாறு தெரிந்தது என்னும் இரண்டாம் கேள்விக்கு விளக்கம் பின்வருமாறு.
“நா யஜுர்வேத தாரிண :” என்னும் சொற்றொடரிலிருந்து யஜுர்வேதம் பயிலவும், ஒதவும், ஒருவருக்கு தாரணஶக்தி இன்றியமையாதது என்பதனை உணரலாம்.
எடுத்துக்காட்டாக யஜுர்வேத ஶாந்தி மந்திரம் பார்ப்போம்:
அதனை தொடங்கும் பொழுது
த்வமேவ: ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி, ரிதம் வதிஷ்யாமி என்று காணப்பெறும்.
முடிவில்
த்வாமேவ: ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மா வாதிஷம், சத்யமவாதிஷம், ரிதமவாதிஷம் என்று மாறியவாறு வரக் காணலாம். இது வெறுமனே இருமுறை தான்.
ஆனால் 5 முறை, 4 முறை ஒரேமாதிரி வந்து குழப்பும் பகுதிகள் தான் யஜுர்வேதத்தில் பெரும்பாலும் இடம்பெறும்.
உதாரணமாக அதிலோகம், அதிஜ்யௌதிஷம், அதிவித்யம் அதிப்ரஜமம் அத்யாத்மம் என்னும் 5 உத்தேசங்களை(விஷயங்களை) பூர்வரூபம், உத்தரரூபம் ,சந்தி, சந்தானம் என்று விவரிக்கும் இடமும், சதஸ்ரததுர்தா வயாஹ்ருதய: என்று பூ:, புவ:, ஸ்வ:, மஹ: என்று விரியும் பகுதி 4 முறையும் வருவனவாம்.
சேவிக்கையில் சிறிது கவனம் தப்பினாலும், தவறுகள் நிகழலாம்.
அவ்வளவு ஏன் ! ஆழ்வார் அருளிச் செய்யும்பொழுது ஒரேயொரு திருவாய்மொழியிலேயே கூட 3 அல்லது 4 பாசுரங்களில் ஒரே எதுகையினை கையாண்டிருப்பார். இதனால் தொடக்கநிலையிலிருப்போர் சேவிக்க சிரமப்படுவது வழக்கமே. சில அடிகளே கூட திரும்பவும் பயின்று வரலாம். சில அடிகளில் பெருமளவு ஒத்திருக்கலாம். எனவே கவனமாக சேவிக்கவேண்டும்.
உதாரணமாக
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ?,
கடல்ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்
கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றனவே?
இதேபோலத்தான் ஹனுமான் சில ஸ்லோகங்களால் ஸ்ரீராமலக்ஷ்மணர்களிடம் உரையாடுகின்றார். எனவேதான் ஸ்ரீராமரும் அவரை, “ந யஜுர்வேத தாரிண: “ (யஜுர்வேதம் தெரியாத ஒருவரால் இப்படிப் பேச இயலாது) என்று பாராட்டுகின்றார்.
மேலும் தைத்தீரிய உபநிஷதம் “அஜாயமான: பஹுதா விஜாயதே” என்கிறது .. (பிறப்பில்லாத திருமால்; பல படிகளாகப் மீனோடு ஆமை கேழல் கோள் அரியாய் என்று பலபடியாகப் பிறக்கிறான்) என்பது பொருள் !
இங்கும் ஹனுமான் தசரதகுமாரர்களைப் பார்த்து –“ நீங்கள் இருவரும் ராஜகுமாரர்கள் போலிருக்கின்றீர்கள். இந்தக் காட்டில் வந்து கஷ்டப்பட என்ன காரணம் என்று கேட்கின்றார்.
சந்திர சூரியர்கள் போலக் காணப்படும் நீங்கள் இந்தக் காட்டில் பெருமூச்சு விட்டுக்கொண்டு, ஒவ்வொரு மரமாக எதையோ தேடுகின்றீர்களே என்றார்.
(தனக்கு அவர்களை ஆதிசேஷன் ஸஹிதரான திருமால் என்று தெரிந்துவிட்டதை பூடகமாகக் காட்டுகிறார். தன் குட்டு வெளிப்பட்டதை சக்கரவர்த்தி திருமகனாரும் இளையாழ்வாரிடம் வெளிப்படுத்தும் இடமே இதுதான்.
இந்த “அஜாயமான: பஹுதா விஜாயதே” என்னும் வேத வாக்கியத்தினை பலதடவைகளில், பலவிதமான உதாரணங்களுடன் திரும்பத் திரும்பக் கேட்கின்றார்.
ராஜர்ஷி தேவப்ரதிமௌ தாபஸௌ சம்ஶிதவ்ரதௌ -3-5
பொருள்:- தவசிகளின் தோற்றத்தில் இருக்கின்றீர்கள். கடுமையான நியமங்களைக் கடிப்பிடிப்பவர் போன்றும் காணப்படுகின்றீர்கள். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
(இறப்பே இல்லாத நீ, கர்மமடியாக நாங்கள் பிறந்தும் இறந்தும் உழலும் இந்த ஸம்சாரமாகிய பூலோகத்தில் எப்படி வந்தாய்?)
தைர்யவந்தௌ ஸுவர்ணாபௌ கௌ யுவாம் சீரவாரஸௌ -3-7
பொருள்:- மிகவும் மனவுறுதி படைத்தவர்கள் போலக் காணப்படுகின்றீர்கள். பொன்னிற மேனியரான நீங்கள், எப்படி மரவுரி தரிக்கலாம் ?
(சுத்த சாத்வீக திருமேனி உடைய நீ எப்படி இந்த ராஜசமும்/தாமசமும் கலந்த அசுத்த சாத்வீகமான (மிஶ்ரசத்வம்) ப்ரக்ருதி மண்டலத்தில் பிறந்தாய் ?)
ஹஸ்திஹஸ்தோபம புஜௌ த்யுதிமந்தௌ நரர்ஷபௌ -3-10
பொருள்:- நீங்கள் மிகுந்த உடலழகும், அவ்வுடலிலிருந்து தேககாந்தியும் ப்ரகாசிக்கக் கொண்டவர்கள் ஆவீர்கள்.யானையின் துதிக்கை போன்ற புஜங்களை உடையவர்கள். ஒளிவீசும் புருஷோத்தமர்கள்.
(தேவர்களுக்குத்தான் ஒளிவீசும் தேகம் உண்டு. மனிதர்களான உங்களுக்கு எவ்வாறு ஒளிவீசும் தேகம் கிடைத்தது ?
மனப்பரிபோடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,
தனக்கு ஒரு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்,
புனத்துழாய் முடிமாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினி யார் நிகர் நீணிலத்தே?
என்பது போலவாம்)
ராஜ்யார்ஹௌ அமரப்ரக்யௌ கதம் தேஶம் இஹாகதௌ -3-12
பொருள்:-இந்தபூமண்டலம் முழுதும் அரசாட்சி செய்யும் யோக்யதையினை உங்களிடம் காண்கிறேன். தேவர்களைப் போல விளங்குகின்றீர்கள். பின்பு ஏன் காட்டிற்கு வந்தீர்கள் ?
(வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி புஷ்கரிணீ தடே |
ரமயா ரமமாணாய வேங்கடேஶாய மங்களம் ||
என்னும் “வைகுண்டத்தினை விட்டு திருவேங்கடம் வந்த திருமகளுடன் கூடிய ஸ்ரீநிவாசனே உனக்கு மங்களம் என்பது போலிருகின்றது.
ஸர்வபூஷண பூஷார்ஹா கிமர்தம் ந விபூஷிதா: -3-15
பொருள்:- அனைத்து அணிகலங்களையும் அணியத்தக்க பேரழகான உடலுறுப்புக்களைக் கொண்ட நீங்கள் ஏன் ஒரு அனிகலனைக் கூட அணியாமல் வெறுந்தேகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றீர்கள் ?
(தாஸாம் ஆவிரபூத் ஸௌரி : ஸ்மயமாந முகாம்புஜ:
பீதாம்பரதர ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மன்மத மன்மத :
“அந்த கோபிகைகளுக்கு இடையில் மஞ்சள் பட்டும், வனமாலையும், ஹாரமும், தோடும், வளையும், கிரீடமும்,மகர குண்டலமும் தரித்து மன்மதனுக்கே ஒரு மனமதன் போல விளங்கும் கண்ணன் எம்பெருமான் தோன்றினான்” என்னும் ஸ்ரீமத்பாகவத ஸ்லோகம் போலவும் உளது)
விஶாலவக்ஷஸௌ வீரௌ மாநுஷௌ தேவரூபிணௌ -3-17
பொருள்:-அகன்ற மார்பு கொண்ட மனிதர்களாக இருந்தாலும், உங்கள் தோற்றமும் வீரமும் தேவர்களைப் போன்றதாக இருக்கின்றது.
(ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந :
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரிம் :
வைகுண்டத்தில் நித்யசூரிகளுக்கு நாதனானவன், திருமகள் கேள்வன், பாற்கடலில் அறிதுயில் கொள்பவன், அந்த அனந்தனின் படுக்கை விட்டு இங்கு மதுரைப்பதியில் அவதரித்தான் என்னும் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம் போலும் உளது)
மேலும் யஜுர்வேதத்தின் வேதாதி என்னும் ஸ்லோகம் இதோ !
இஷேத்வோர்ஜே த்வா வாயவஸ்தோ பாயவஸ்தோ
தேவோ வ: ஸவிதா ப்ரார்பயது ஶ்ரேஷ்ட தமாய கர்மணே
இதுதான் முழு 81 ஶாகைகளாகப் பணைத்த யஜுர்வேதம் சொல்லும் கருத்தினை சுருக்கிச் சொல்லும் முதல் ஸ்லோகமாகும்.
இதனை மேலும் சுருக்கினால் வரும் வ்யாஹ்ருதி எழுத்துதான் “புவ:” என்பதாகும். இது தேவலோகங்களையும், அங்கு காணும் செல்வங்களும், அவற்றை அடைவிக்கும் ஜ்யோதிஷ்டோமம் போன்ற வழிகளையும் குறிக்கும்.
அதன்படியே தேவலோக விஷயங்களை குறிக்கும் ஸ்லோகம் பின்வருமாறு
யத்ருச்சயா ஏவ ஸம்ப்ராப்தௌ சந்த்ரசூர்யௌ வசுந்தராம் -3-13
பொருள்:-எதிர்பாடாதவிதமாக ம்ண்ணுலகை அடைந்த சூரிய சந்திரர்களைப் போல இருக்கின்றீர்கள்.
அன்யோன்ய ஸ்த்ருஸௌ வீரௌ தேவலோகௌ இஹாகதௌ -3-12
பொருள்:-மனவலிமை பெற்ற வீரர்களாகிய நீங்கள் தேவலோகத்திலிருந்து இந்த காட்டிற்கு வந்துவிட்டவர்கள் போலுளது.
இமே ச தநுஷீ சித்ரே ஶ்லக்ஷ்ணே சித்ராநுலேபணே |
ப்ரகாஶேதே யதேந்த்ரஸ்ய வஜ்ரே ஹேமவிபூஷிதே || -3-16
பொருள்:- உங்களுடைய விற்கள் இரண்டும் அற்புதமாக இருக்கின்றன. பளிச்சென்று ஒளிவீசிக் கொண்டு, நறுமணப் பூச்சுக்கள் பூசப்பட்டும் விளங்குகின்றன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்திரனுடைய இரண்டு வஜ்ராயுதங்களைப் போன்று விற்கள் அற்புதமாக இருக்கின்றன.
யஜுர்வேதத்தில் ஒரு விஷயத்தினை விளக்க திரும்பத் திரும்ப பல்வேறு உதாரணங்கள் எடுத்தாளப்படுதல் போன்று அனுமனும் பேசினார். அவற்றை நல்ல தாரணஶக்தி இருந்தால் மட்டுமே ஓதவும், பயிலவும் முடியும்.
எனவே தான் ஸ்ரீராமரும், ஹனுமானை – “இவன் யஜுர்வேதம் முழுதுமாகத் தெரிந்தவன்” என்று ஆச்சரியமாகப் பாராட்டுகின்றார்.
[குறிப்பு:- யஜுர்வேதத்தினை பகுத்த வ்யாசர், அதனை தம் சிஷ்யரான வைஶம்பாயனரிடம் பொறுப்பாக அளித்தார். அவரிடம் மனஸ்தாபம் கொண்ட சிஷ்யரான யாக்ஞவல்க்யர், தாம் கற்ற யஜுர்வேதத்தினை குருவிடமே கக்கிவிட்டார். அவற்றை மற்ற சீடர்கள் தித்திரியப் பறவைகளாக உருமாறி விழுங்கி ஸ்வீகரித்தனர். எனவே அந்தப் பகுதிகள் தைத்தீரியம் எனவும் கிருஷ்ண யஜுர்வேதம் எனவும் வழங்கப் பெறும்.
பின்னர் யாக்ஞவல்க்யர், சூரியபகவான் மீது தவம் புரிந்து அவரிடமே யஜுர்வேதங்களைக் கற்றார். இது ஶுக்ல யஜுர்வேதம் எனப்படும்.
அவ்வாறே ஹனுமனும் சூரியபகவானிடமிருந்தே முழு வேத, வேதாந்தங்களையும் கற்றார். இறுதி வரையில் குருவுக்கே கைங்கர்யம்/தொண்டு செய்வது என்று நைஷ்டீக வ்ரதம் பூண்டார். ஆனால் சூரியன் அவர தன் மகனான சுக்ரீவனிடம் சென்று சேரச் செய்தார். சுக்ரீவனும் பின்னர் சக்கரவர்த்தி திருமகனிடம் அவரை கொடுத்து விட்டார்.]
🌹🌹🌹🌹🌹🌹🌹
ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீரங்கமன்னார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
அண்ணன் திருவடிகளே சரணம்.
**********************************************************************