Post by Amritha Varshini on Jan 10, 2024 5:05:47 GMT 5.5
திருப்பள்ளியெழுச்சி - நங்கநல்லூர் J K SIVAN
மணிவாசகர்
மார்கழி 25ம் நாள்
5வது பாடல்.
மணிவாசகரால் நமக்கு கிடைத்த திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் ஒரு அற்புத சிற்பக்கலை கூடம். பலமுறை இதன் அற்புதத்தைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.
முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கும், மேலே பார்க்கும் ஒரு உடும்பும் மிக அழகான சிலைகள்.
'' அடே பக்தா, அலைபாயும் உன் குரங்கு மனத்தை அடக்கி, உடும்புப் பிடியாக அதை ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, ஆத்ம நாதரின் திருப்பாதங்களில் அதைச் செலுத்து என்று சொல்லாமல் சொல்கிறது.'
பத்து பன்னிரண்டு வளையங்கள் கொண்ட ஒரே கல்லில் செதுக்கிய கல் சங்கிலி, ்ஒரு மண்டபத்தின் மேற்கூரை யில் தட்டையான பத்து கற்களை எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் வைத்திருப்பது ரொம்ப ஆச்சர்யம். கற்களின் விளிம்பில் கம்பிகள் போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்துள்ளார்கள். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள இக்கலைத் திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்து நம் முன்னோர் அறிவின் முதிர்ச்சியை ஆனந்தமாக ரசிக்கலாம்.
பாண்டிய நாட்டுச் சிற்பிகளே எப்படி உங்களால் இப்படிப் பண்ண முடிந்தது என்ற ஆச்சர்யம் உலகத்தையே வியக்க வைக்கிறது.
பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன் படிக்கை எழுதும்போது 'ஆவுடையார் கோயில் கொடுங்கை களைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்ற எழுதும் வழக்கம் இருந்தது.
உள்ளே ரகுநாத பூபால மண்டபம் அற்புதமான வேலைபாடுடைய பெரிய மூர்த்தங்களைக் கொண்ட மண்டபம். பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர் 350 வருஷங்களுக்கு முன் கட்டியது. இடது பக்கம் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. வண்ண ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய் கொண்டிருக் கிறதே? யார் என்ன செய்யப் போகிறார்களோ? அதில் ஒரு ஓவியம் 'அண்டரண்ட பட்சி' ரெண்டு கழுத்து கொண்ட பெரிய பறவை. ரெண்டு யானையை ஒரே சமயம் தூக்கும் பலம் கொண்டதாம்.
எழு நிலை ராஜகோபுரம் இப்போது தூரத்தில் இருந்தே பார்க்கலாம். ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் கல்வெட்டாக விவரம் சொல்கிறது. ''லட்சம் வராகனுக்கு மேல் வரும் வட்டிப் பணத்தினால் ஆவுடையார் கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மம்.'' என்கிறது.
மீதியை அடுத்த பாடலோடு சேர்த்து அறிவோம்.
இனி ஐந்தாவது திருப்பள்ளி எழுச்சி பாடல்:
5 ''பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!''
திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் 20 பகுதிகள் (சிவபுராணம்) , திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
மேலே காணும் திருப்பள்ளி எழுச்சி பாடலின் விளக்கம் அறிவோம்:
'' பரமசிவா, ஆத்மநாதா, குளிர்ந்த பச்சைப் பசேலென வயல்கள் நிரம்பியிருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்து றைக்கு அரசனே! நினைத்தாலே இனிப்பவனே, அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருள்வாய். எங்களுடைய தவறுகள், குற்றங்களை எல்லாம் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற தலைவா, உன்னை, பஞ்ச பூதங்களிலும் நிரம்பியவன் என்று அறிவேன். எங்கும் வருவதும் போவதும் இல்லாதவனே எதிலும் எங்கும் நிலையானவனே, அறிவு டையோர், கற்றோர், இசைப் பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படியாக துயில் நீங்கி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.''
மணிவாசகர்
மார்கழி 25ம் நாள்
5வது பாடல்.
மணிவாசகரால் நமக்கு கிடைத்த திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் ஒரு அற்புத சிற்பக்கலை கூடம். பலமுறை இதன் அற்புதத்தைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.
முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கும், மேலே பார்க்கும் ஒரு உடும்பும் மிக அழகான சிலைகள்.
'' அடே பக்தா, அலைபாயும் உன் குரங்கு மனத்தை அடக்கி, உடும்புப் பிடியாக அதை ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, ஆத்ம நாதரின் திருப்பாதங்களில் அதைச் செலுத்து என்று சொல்லாமல் சொல்கிறது.'
பத்து பன்னிரண்டு வளையங்கள் கொண்ட ஒரே கல்லில் செதுக்கிய கல் சங்கிலி, ்ஒரு மண்டபத்தின் மேற்கூரை யில் தட்டையான பத்து கற்களை எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் வைத்திருப்பது ரொம்ப ஆச்சர்யம். கற்களின் விளிம்பில் கம்பிகள் போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்துள்ளார்கள். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள இக்கலைத் திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்து நம் முன்னோர் அறிவின் முதிர்ச்சியை ஆனந்தமாக ரசிக்கலாம்.
பாண்டிய நாட்டுச் சிற்பிகளே எப்படி உங்களால் இப்படிப் பண்ண முடிந்தது என்ற ஆச்சர்யம் உலகத்தையே வியக்க வைக்கிறது.
பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன் படிக்கை எழுதும்போது 'ஆவுடையார் கோயில் கொடுங்கை களைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்ற எழுதும் வழக்கம் இருந்தது.
உள்ளே ரகுநாத பூபால மண்டபம் அற்புதமான வேலைபாடுடைய பெரிய மூர்த்தங்களைக் கொண்ட மண்டபம். பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர் 350 வருஷங்களுக்கு முன் கட்டியது. இடது பக்கம் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. வண்ண ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய் கொண்டிருக் கிறதே? யார் என்ன செய்யப் போகிறார்களோ? அதில் ஒரு ஓவியம் 'அண்டரண்ட பட்சி' ரெண்டு கழுத்து கொண்ட பெரிய பறவை. ரெண்டு யானையை ஒரே சமயம் தூக்கும் பலம் கொண்டதாம்.
எழு நிலை ராஜகோபுரம் இப்போது தூரத்தில் இருந்தே பார்க்கலாம். ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் கல்வெட்டாக விவரம் சொல்கிறது. ''லட்சம் வராகனுக்கு மேல் வரும் வட்டிப் பணத்தினால் ஆவுடையார் கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மம்.'' என்கிறது.
மீதியை அடுத்த பாடலோடு சேர்த்து அறிவோம்.
இனி ஐந்தாவது திருப்பள்ளி எழுச்சி பாடல்:
5 ''பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!''
திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் 20 பகுதிகள் (சிவபுராணம்) , திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
மேலே காணும் திருப்பள்ளி எழுச்சி பாடலின் விளக்கம் அறிவோம்:
'' பரமசிவா, ஆத்மநாதா, குளிர்ந்த பச்சைப் பசேலென வயல்கள் நிரம்பியிருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்து றைக்கு அரசனே! நினைத்தாலே இனிப்பவனே, அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருள்வாய். எங்களுடைய தவறுகள், குற்றங்களை எல்லாம் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற தலைவா, உன்னை, பஞ்ச பூதங்களிலும் நிரம்பியவன் என்று அறிவேன். எங்கும் வருவதும் போவதும் இல்லாதவனே எதிலும் எங்கும் நிலையானவனே, அறிவு டையோர், கற்றோர், இசைப் பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படியாக துயில் நீங்கி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.''