Post by Amritha Varshini on Dec 27, 2023 5:03:57 GMT 5.5
ஆர்த்ரா தரிசனம் - நங்கநல்லூர் J K SIVAN
திருவாதிரைக்கு ஒருவாய்க் களி
நாளைக்கு 'மார்கழி மாதம் திருவாதிரை வரப்போகுது ஐயே '! S G கிட்டப்பா பாடிய இந்த பாட்டு இன்னும் காதில் ஒலிக்கிறது. சிதம்பரத்தில் நான் மனதால் நடராஜன் முன் நிற்கிறேன். என்னால் அங்கே உடம்போடு போய் நிற்க வழியில்லையே என்ன செய்வேன்? தில்லை வாழ் நடராஜா, உன்னை விடியற்காலை கண் குளிர சேவிக்கும் நாள் மார்கழி திருவாதிரை . சிவ பக்தர்கள் தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன, மனம் மகிழ்ந்து ''ஓம் நமசிவாய, சிவசிவ'' ஹர ஹர மகாதேவா ''
என்று பஞ்சாக்ஷரம் ஜபிக்கும் பரமேஸ்வர நாள். பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின் அஞ்ஞானத்தை போக்க, ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, டமருகம் எனும் உடுக்கு, அக்னி, அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜனாக
தரிசனம் அளித்த நாள் ஆர்த்ரா. சிதம்பரத்தில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் அருளிய நாள்.
''ஆ ! ருத்ரா' என வியக்க வைப்பது தான் 'ஆருத்ரா''வோ? இடது பக்கம் உமையவள். அவள் கால் நோகக்கூடாது என்று ''இடது பதம் தூக்கி ஆளும்'' நடராஜன் அடி பணிவோம்.
''பரமேஸ்வரா, என் மகன் மார்கண்டேயனுக்கு இன்றோடு பதினாறு முடிகிறதே.. வாழ்க்கையின் கடைசி நாள் இன்று அவனுக்கு. யமன் உயிரை எடுக்க வரும்போது ''சிவனே துணை'' என மார்க்கண்டேயன் சிவனை கட்டி தழுவுகிறான். இதோ யமன் வந்து விட்டான். பாசக்கயிறு வீசி மார்க்கண்டேயன் உயிரை எடுக்கப்போகிறான். யமன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயன் மீதா விழுந்தது? மார்க்கண்டேயன் அணைத்துக்கொண்டிருந்த சிவன் மேல் விழ ரௌருத்ராகாரமாக லிங்கத்திலிருந்து பொங்கி எழுந்த சிவன் மறலியை காலால் எட்டி உதைக்கிறான். கால ஸம்ஹார மூர்த்தியை திருக்கடவூரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களில் நானும் ஒருவன்.
திருவடி சரணம் அடைந்த யமன் புத்துயிர் பெற்று, மார்க்கண்டேயன் சிரஞ்சீவி ஆகிறான். சிவனருள் அளித்த களிப்பு தான் திருவாதிரை ''களி'' யாகியதோ? திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது வழக்கமாக நாம் சொல்வது.
உத்தர கோச மங்கையில் அழகு ததும்பும் மரகத நடராஜனை பார்க்காதவர்கள் இதோ இத்துடன் அற்புத மரகதன் திவ்ய தரிசனம் பெறலாம். வருஷத்தில் ஒருநாள்.
திருவண்ணாமலை முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி. அங்கே மார்கழி அதிகாலை வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி. மார்கழி குளிருக்கும் பனிக்கும் மகேசனின் பனிமலை வாசத்துக்கும் எவ்வளவு நெருக்கம் பார்த்தீர்களா. பனி குளிர்ச்சியானது. திருவெம்பாவை மனதை குளிர வைக்கிறது. குளிருக்கு உஷ்ணம். உஷ்ணம் எதிலிருந்து வரும்? அக்னி. அக்னி ஸ்தலம் எது ? திருவண்ணாமலை.
ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில் தையா தக்கா என பாத் ரூமில் ஆடுகிறோம்
பாடுகிறோம். ஆனந்தம் என்றாலே நடனம். சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான் சதானந்தன் .ஆனந்த நடேசன், நடராஜன். கனகசபையில் ஆடும் சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது.
மார்கழி திருவாதிரை அன்று ஆடிய பிரசித்தமான ஆனந்த நடனத்தை தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத்துக்கும் மற்ற எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போவது ஒரு நல்ல அதிர்ஷ்டம். கபாலி என்பவனைக் காணக் கண் கோடி போதாது.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனுக்கு ஆருத்ரா அன்று ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணத்தால் இவ்வளவு ஆர்வம், உற்சாகம் நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.
''ஹரி, எனக்கு சொல்லுங்களேன். இன்று ஏன் உங்களுக்கு இவ்வளவு உற்சாகம்? என்றான் ஆதி சேஷன்.
''சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்ட வத்தை''
ஆதிசேஷன் ஓடுகிறார். ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
‘பதஞ்சலி’ என்று யார் இவ்வளவு மிருதுவாக அழைப்பது? குரல் கேட்டு கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன்! . பதஞ்சலியின் கைகள் தொழுதன .
‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் எனும் புலிக்கால் ரிஷியும் எனது நடனம் காண தவம் செய்கிறார். உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் நான் ஆனந்த நடனமாடும் காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.
சிவனுக்குரிய நக்ஷத்ரம் திருவாதிரை.ஆகவே தான் ஆதிரையான் எனக் கூறுவர்.
தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று முறை யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மத யானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன் சொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்ரா தரிசனம்.
சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகு தான் உணவருந்துவார்.
சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லா மல், வீட்டில் இருந்த கேழ் வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியாரை எதிர் பார்த்திருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட, தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார்.
''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத் தார். வந்தவரும் களியை ''ஆஹா பிரமாதம் என்று உண்டு மீதி இருந்ததையும் ''அடுத்த வேளை சாப்பிட இது வேண்டும் '' என்று டிபன் கட்டி எடுத்துச் சென்றுவிட்டார். மீதி காளி சாப்பிட இல்லாததால் சேந்தனார் கம்பல்சரியாக. compulsory, கட்டாயமாக அன்று முழு உபவாசம் ! .
சிதம்பரம் ஆலயத்தில் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்ப்ப கிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? ''
விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான். ''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது'' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லி இருந்தாரே. சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த் திரு விழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த் திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.
சிவனைத் தேரில் ஏற்றியாகி விட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழை யினால் சேற்றில் தேர் சக்கரம் மண்ணில் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான். அசரீரி
ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று.
''நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே எனக்குத் தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்'' என துடித்து சிவனை வேண்டினார் சேந்தனார். ஆனால் அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாட முடிந்தது. நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்தி ருக்கிறது.
"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும். பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர் களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள்.
''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந் தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத்தது.
திருவாதிரைக்கு ஒருவாய்க் களி
நாளைக்கு 'மார்கழி மாதம் திருவாதிரை வரப்போகுது ஐயே '! S G கிட்டப்பா பாடிய இந்த பாட்டு இன்னும் காதில் ஒலிக்கிறது. சிதம்பரத்தில் நான் மனதால் நடராஜன் முன் நிற்கிறேன். என்னால் அங்கே உடம்போடு போய் நிற்க வழியில்லையே என்ன செய்வேன்? தில்லை வாழ் நடராஜா, உன்னை விடியற்காலை கண் குளிர சேவிக்கும் நாள் மார்கழி திருவாதிரை . சிவ பக்தர்கள் தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன, மனம் மகிழ்ந்து ''ஓம் நமசிவாய, சிவசிவ'' ஹர ஹர மகாதேவா ''
என்று பஞ்சாக்ஷரம் ஜபிக்கும் பரமேஸ்வர நாள். பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின் அஞ்ஞானத்தை போக்க, ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, டமருகம் எனும் உடுக்கு, அக்னி, அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜனாக
தரிசனம் அளித்த நாள் ஆர்த்ரா. சிதம்பரத்தில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் அருளிய நாள்.
''ஆ ! ருத்ரா' என வியக்க வைப்பது தான் 'ஆருத்ரா''வோ? இடது பக்கம் உமையவள். அவள் கால் நோகக்கூடாது என்று ''இடது பதம் தூக்கி ஆளும்'' நடராஜன் அடி பணிவோம்.
''பரமேஸ்வரா, என் மகன் மார்கண்டேயனுக்கு இன்றோடு பதினாறு முடிகிறதே.. வாழ்க்கையின் கடைசி நாள் இன்று அவனுக்கு. யமன் உயிரை எடுக்க வரும்போது ''சிவனே துணை'' என மார்க்கண்டேயன் சிவனை கட்டி தழுவுகிறான். இதோ யமன் வந்து விட்டான். பாசக்கயிறு வீசி மார்க்கண்டேயன் உயிரை எடுக்கப்போகிறான். யமன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயன் மீதா விழுந்தது? மார்க்கண்டேயன் அணைத்துக்கொண்டிருந்த சிவன் மேல் விழ ரௌருத்ராகாரமாக லிங்கத்திலிருந்து பொங்கி எழுந்த சிவன் மறலியை காலால் எட்டி உதைக்கிறான். கால ஸம்ஹார மூர்த்தியை திருக்கடவூரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்களில் நானும் ஒருவன்.
திருவடி சரணம் அடைந்த யமன் புத்துயிர் பெற்று, மார்க்கண்டேயன் சிரஞ்சீவி ஆகிறான். சிவனருள் அளித்த களிப்பு தான் திருவாதிரை ''களி'' யாகியதோ? திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது வழக்கமாக நாம் சொல்வது.
உத்தர கோச மங்கையில் அழகு ததும்பும் மரகத நடராஜனை பார்க்காதவர்கள் இதோ இத்துடன் அற்புத மரகதன் திவ்ய தரிசனம் பெறலாம். வருஷத்தில் ஒருநாள்.
திருவண்ணாமலை முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி. அங்கே மார்கழி அதிகாலை வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி. மார்கழி குளிருக்கும் பனிக்கும் மகேசனின் பனிமலை வாசத்துக்கும் எவ்வளவு நெருக்கம் பார்த்தீர்களா. பனி குளிர்ச்சியானது. திருவெம்பாவை மனதை குளிர வைக்கிறது. குளிருக்கு உஷ்ணம். உஷ்ணம் எதிலிருந்து வரும்? அக்னி. அக்னி ஸ்தலம் எது ? திருவண்ணாமலை.
ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில் தையா தக்கா என பாத் ரூமில் ஆடுகிறோம்
பாடுகிறோம். ஆனந்தம் என்றாலே நடனம். சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான் சதானந்தன் .ஆனந்த நடேசன், நடராஜன். கனகசபையில் ஆடும் சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது.
மார்கழி திருவாதிரை அன்று ஆடிய பிரசித்தமான ஆனந்த நடனத்தை தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத்துக்கும் மற்ற எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போவது ஒரு நல்ல அதிர்ஷ்டம். கபாலி என்பவனைக் காணக் கண் கோடி போதாது.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனுக்கு ஆருத்ரா அன்று ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணத்தால் இவ்வளவு ஆர்வம், உற்சாகம் நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.
''ஹரி, எனக்கு சொல்லுங்களேன். இன்று ஏன் உங்களுக்கு இவ்வளவு உற்சாகம்? என்றான் ஆதி சேஷன்.
''சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்ட வத்தை''
ஆதிசேஷன் ஓடுகிறார். ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
‘பதஞ்சலி’ என்று யார் இவ்வளவு மிருதுவாக அழைப்பது? குரல் கேட்டு கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன்! . பதஞ்சலியின் கைகள் தொழுதன .
‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் எனும் புலிக்கால் ரிஷியும் எனது நடனம் காண தவம் செய்கிறார். உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் நான் ஆனந்த நடனமாடும் காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.
சிவனுக்குரிய நக்ஷத்ரம் திருவாதிரை.ஆகவே தான் ஆதிரையான் எனக் கூறுவர்.
தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று முறை யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மத யானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன் சொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்ரா தரிசனம்.
சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகு தான் உணவருந்துவார்.
சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லா மல், வீட்டில் இருந்த கேழ் வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியாரை எதிர் பார்த்திருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட, தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார்.
''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத் தார். வந்தவரும் களியை ''ஆஹா பிரமாதம் என்று உண்டு மீதி இருந்ததையும் ''அடுத்த வேளை சாப்பிட இது வேண்டும் '' என்று டிபன் கட்டி எடுத்துச் சென்றுவிட்டார். மீதி காளி சாப்பிட இல்லாததால் சேந்தனார் கம்பல்சரியாக. compulsory, கட்டாயமாக அன்று முழு உபவாசம் ! .
சிதம்பரம் ஆலயத்தில் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்ப்ப கிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? ''
விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான். ''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது'' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லி இருந்தாரே. சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த் திரு விழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த் திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.
சிவனைத் தேரில் ஏற்றியாகி விட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழை யினால் சேற்றில் தேர் சக்கரம் மண்ணில் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான். அசரீரி
ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று.
''நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே எனக்குத் தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்'' என துடித்து சிவனை வேண்டினார் சேந்தனார். ஆனால் அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாட முடிந்தது. நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்தி ருக்கிறது.
"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும். பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர் களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள்.
''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந் தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத்தது.