Post by Amritha Varshini on Dec 23, 2023 5:09:47 GMT 5.5
நாடகமன்றோ நடக்குது - நங்கநல்லூர் J K SIVAN
ஆதிசேஷன் மேல் அவன் ஏதோ சும்மா படுத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வினாடியின் கோடியில் ஒரு பங்கிலும் அவன் சதா சர்வகாலமும் தான் படைத்த இந்த பிரபஞ்சத்தில் அவன் உருவாக்கிய ஜீவராசிகளின் க்ஷேமம் ஒன்றிலேயே அவன் கவனம். அப்படி இருக்கும் ஸ்ரீமன் நாரயணனுக்கு தன்னிடம் அடைக்கலம் புகுந்த சில வஸ்துக்கள் என்ன நினைக்கிறது, எப்படி நடந்து கொள்கிறது என்று தெரியாமலா இருக்கும். அவற்றின் தவறை நிறுத்துவதும் திருத்துவதும் அவன் வேலையோ லீலையோ தானே!
திருப்பாற்கடலில் ஒருநாள் ஆதி நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்ளவில்லை. எழுந்து எங்கோ சென்று விட்டான். வழக்கமாக எடுத்துச் செல்லும் சங்கு சக்ரத்தையும் எடுத்துச் செல்லவில்லையே. கருடன் மேலும் பிரயாணம் செய்யவில்லை. என்ன ஆச்சர்யம்? எதனால்?
ஸ்ரீமந் நாராயணனின் ஒவ்வொரு செய்கைக்கும் எண்ணத்திற்கும் ஏதோ ஒரு தக்க காரணம் இல்லாமலா இருக்கும். என் போன்ற ஒரு சாதாரணனால் என்ன என்று புரிந்து கொள்ளவோ எடுத்து உங்களுக்குத் சொல்லவோ முடியுமா?
ஸ்ரீமந் நாராயணன் இல்லாமல் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் எதிர் பாராத சுதந்திரம் என்று சொல்வதா ‘ரெஸ்ட்’ என்பதா?
உலகரீதியில் நடைமுறையில் நமக்குத் தெரிந்தது என்ன?
எஜமான் தலை மறைவில் எப்போதும் சிப்பந்திகளுக்கு கொண்டாட்டம் தானே. ஆகவே நாராயணனின் தலை மறைவில் இந்த சங்கு, சக்ரம், கருடன், ஆதிசேஷன் நால்வருக்குள்ளும் எந்த ஒரு சம்வாதமோ பட்டிமன்றமோ இல்லாவிட்டாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேச்சு நடந்தது என்று வைத்துக் கொள்வது இந்த கட்டுரைக்கு உத்தமம். இது இப்படி நடைபெறும், நடைபெறவேண்டும் என்று தெரிந்தோ, அறிந்தோ தான் நாராயணன் அவற்றை தனியாக விட்டு சென்றிருப்பானோ?
இனி அங்கே நடந்த ஒரு சம்பாஷணையை விவரிக்கிறேன். கேளுங்கள்:
ஆதிசேஷன்: “நான் மனசு திறந்து சொல்கிறேன் கேள், கருடா, நீ எப்போதும் ஒரு தனிப்பட்ட பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பெருமிதம் கர்வம் தெரிகிறது உன் குணத்தில். எனக்கு ரொம்ப நாளா மனசிலே இது பற்றி வருத்தம் தான். எப்படிச் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இதோ இப்போது சொல்கிறேன்''
கருடன்: “இதோ பார் ஆதிசேஷா, நீ இன்னும் தெளியவில்லை என்று தோன்றுகிறது. படுக்கையாக இருப்பவன் அல்லவா. இன்னும் உனக்கு தூக்கக் கலக்கம் தெளியவில்லை. பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? உண்மையாகவே சொல். நான் எப்போது பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்?. கண்ணதாசன் பாட்டைக் கேட்டு விட்டு " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " டயலாக் எல்லாம் பேசாதே. அது நமக்குள் வேண்டாம். வேற்றுமையை மனசில் வளர்க்காதே''
ஆதிசேஷன்: "ரொம்ப அழகாகத் தான் பேசுகிறாய் கருடா. நீ சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்து விடுமா?
நாராயணனை நான் தான் சுமக்கிறேன் என்று பெருமை பேசுகிறாயாம். அரசல் புரசலாக என் காதில் விஷயம் அடிக்கடி விழுகிறது. என்னைப் பார். நான் இன்றேல், நாராயணனுக்கு நடுக்கடலில் பாற்கடலில் படுக்கை ஏது ? அதற்காக
நான் பெருமையா பீற்றிக் கொள்கிறேன்?”
(பேசாமல் பேசி, சொல்லாமல் சொல்லி தன் டம்பத்தை பீற்றிக்கொண்டான் ஆதிசேஷன்.)
கருடன்: “ஹஹாஹா’’- ஆதிசேஷா ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கிச் செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன்? அப்படித்தான் என்றாவது உன்னிடம் சொன்னேனா?
(பேச்சு வளர்ந்தது. ரெண்டு பேர் மோதினால் மற்றவர்களுக்கு கொண்டாட்டம் என்பது நமக்கு மட்டுமா சொந்தம். அங்கும் சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது,)
சக்ரம்: “ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா? நாராயணனை படுக்கும்போதும் பிரயாணத்திலும் சுமக்கும் நீங்கள் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்? என்னைப் பாருங்கள். நான் நாராயணனை சுமக்கவில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்குப் பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து என் பலத்தால் நாராயணனுக்கு பெருமை சேர்த்து அமைதியாக அவன் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி இதுவரை தற்பெருமை அடித்துகொள்கிறேனா? புரிந்து கொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள்””
(அமர்த்தலாக சக்ரம் பேசிவிட்டு மற்றவர்களை அலக்ஷியமாக கர்வத்தோடு ஒரு முறை பார்த்தது. ஆதிசேஷனும் கருடனும் சுதர்சன சக்கரத்தின் பேச்சை ஏற்பவர்களா? அவர்கள் இருவருக்கும் ''இந்த பேச்சில் சக்கரத்தின் கர்வம் தான் உள்ளது. எனவே இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் சங்கு கிட்டே ஞாயம் கேட்போம் '' என சங்கின் பக்கம் திரும்பின.)
ஆதிசேஷன்: '' ஹே பாஞ்சஜன்யம் சங்கமே, இந்த சக்ரத்தின் திமிர் பேச்சைக் கேட்டாயா? அமைதியாக இதுவரை இத்தனையும் கவனித்துக்கொண்டு ஏன் நீ பேசாமல் இருக்கிறாய். ஞாயத்தை எடுத்துச் சொல்''
சங்கம்: “நான் பேசமாட்டேன்” (சங்கு தலையை ஆட்டியது)
கருடன்: “சங்கே இந்த பிரச்னையில் நீ உன் அபிப்ராயம் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்”
சங்கு : ''சரி என்னைப் பேசாமல் இருக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்:
”நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. நம்மால் அவனுக்கு பெருமை எந்த விதத்திலும் இல்லை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணனின் திருவாய் இதழ் மலர்ந்தருளி அவனது மூச்சுக் காற்றின் சப்தம் என் மூலம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் ஜீவ நாதம். எனக்கென ஒரு செயலுமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் சேர்த்து தான், உலகில் அவனின்றி ஓர் அணுவும் அசையாது. உங்களின் தன்மையும் நாராயணின் கருணையால் உங்களிடம் சேரும் அபரிமித சக்தியும் உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்றுஇருங்கள். அது தான் உண்மை. அது தான் சரியானதும் கூட”.
++
சங்கின் பொறுப்புணர்ச்சி பதிலால் அங்கே நிசப்தம் நிலவியது. ஆதிசேஷன், கருடன், சங்கு சக்ரம் நால்வருமே தங்களுக்குள் நாராயணனை நினைத்து கொண்டிருந்த போதுதான் இதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான்.
அவன் விரும்பிய நாடகத்தை அவன் தான் கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டானே .
ஆதிசேஷன் மேல் அவன் ஏதோ சும்மா படுத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வினாடியின் கோடியில் ஒரு பங்கிலும் அவன் சதா சர்வகாலமும் தான் படைத்த இந்த பிரபஞ்சத்தில் அவன் உருவாக்கிய ஜீவராசிகளின் க்ஷேமம் ஒன்றிலேயே அவன் கவனம். அப்படி இருக்கும் ஸ்ரீமன் நாரயணனுக்கு தன்னிடம் அடைக்கலம் புகுந்த சில வஸ்துக்கள் என்ன நினைக்கிறது, எப்படி நடந்து கொள்கிறது என்று தெரியாமலா இருக்கும். அவற்றின் தவறை நிறுத்துவதும் திருத்துவதும் அவன் வேலையோ லீலையோ தானே!
திருப்பாற்கடலில் ஒருநாள் ஆதி நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்ளவில்லை. எழுந்து எங்கோ சென்று விட்டான். வழக்கமாக எடுத்துச் செல்லும் சங்கு சக்ரத்தையும் எடுத்துச் செல்லவில்லையே. கருடன் மேலும் பிரயாணம் செய்யவில்லை. என்ன ஆச்சர்யம்? எதனால்?
ஸ்ரீமந் நாராயணனின் ஒவ்வொரு செய்கைக்கும் எண்ணத்திற்கும் ஏதோ ஒரு தக்க காரணம் இல்லாமலா இருக்கும். என் போன்ற ஒரு சாதாரணனால் என்ன என்று புரிந்து கொள்ளவோ எடுத்து உங்களுக்குத் சொல்லவோ முடியுமா?
ஸ்ரீமந் நாராயணன் இல்லாமல் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் எதிர் பாராத சுதந்திரம் என்று சொல்வதா ‘ரெஸ்ட்’ என்பதா?
உலகரீதியில் நடைமுறையில் நமக்குத் தெரிந்தது என்ன?
எஜமான் தலை மறைவில் எப்போதும் சிப்பந்திகளுக்கு கொண்டாட்டம் தானே. ஆகவே நாராயணனின் தலை மறைவில் இந்த சங்கு, சக்ரம், கருடன், ஆதிசேஷன் நால்வருக்குள்ளும் எந்த ஒரு சம்வாதமோ பட்டிமன்றமோ இல்லாவிட்டாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேச்சு நடந்தது என்று வைத்துக் கொள்வது இந்த கட்டுரைக்கு உத்தமம். இது இப்படி நடைபெறும், நடைபெறவேண்டும் என்று தெரிந்தோ, அறிந்தோ தான் நாராயணன் அவற்றை தனியாக விட்டு சென்றிருப்பானோ?
இனி அங்கே நடந்த ஒரு சம்பாஷணையை விவரிக்கிறேன். கேளுங்கள்:
ஆதிசேஷன்: “நான் மனசு திறந்து சொல்கிறேன் கேள், கருடா, நீ எப்போதும் ஒரு தனிப்பட்ட பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பெருமிதம் கர்வம் தெரிகிறது உன் குணத்தில். எனக்கு ரொம்ப நாளா மனசிலே இது பற்றி வருத்தம் தான். எப்படிச் சொல்வது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இதோ இப்போது சொல்கிறேன்''
கருடன்: “இதோ பார் ஆதிசேஷா, நீ இன்னும் தெளியவில்லை என்று தோன்றுகிறது. படுக்கையாக இருப்பவன் அல்லவா. இன்னும் உனக்கு தூக்கக் கலக்கம் தெளியவில்லை. பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? உண்மையாகவே சொல். நான் எப்போது பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்?. கண்ணதாசன் பாட்டைக் கேட்டு விட்டு " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " டயலாக் எல்லாம் பேசாதே. அது நமக்குள் வேண்டாம். வேற்றுமையை மனசில் வளர்க்காதே''
ஆதிசேஷன்: "ரொம்ப அழகாகத் தான் பேசுகிறாய் கருடா. நீ சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்து விடுமா?
நாராயணனை நான் தான் சுமக்கிறேன் என்று பெருமை பேசுகிறாயாம். அரசல் புரசலாக என் காதில் விஷயம் அடிக்கடி விழுகிறது. என்னைப் பார். நான் இன்றேல், நாராயணனுக்கு நடுக்கடலில் பாற்கடலில் படுக்கை ஏது ? அதற்காக
நான் பெருமையா பீற்றிக் கொள்கிறேன்?”
(பேசாமல் பேசி, சொல்லாமல் சொல்லி தன் டம்பத்தை பீற்றிக்கொண்டான் ஆதிசேஷன்.)
கருடன்: “ஹஹாஹா’’- ஆதிசேஷா ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கிச் செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன்? அப்படித்தான் என்றாவது உன்னிடம் சொன்னேனா?
(பேச்சு வளர்ந்தது. ரெண்டு பேர் மோதினால் மற்றவர்களுக்கு கொண்டாட்டம் என்பது நமக்கு மட்டுமா சொந்தம். அங்கும் சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது,)
சக்ரம்: “ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா? நாராயணனை படுக்கும்போதும் பிரயாணத்திலும் சுமக்கும் நீங்கள் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்? என்னைப் பாருங்கள். நான் நாராயணனை சுமக்கவில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்குப் பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து என் பலத்தால் நாராயணனுக்கு பெருமை சேர்த்து அமைதியாக அவன் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி இதுவரை தற்பெருமை அடித்துகொள்கிறேனா? புரிந்து கொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள்””
(அமர்த்தலாக சக்ரம் பேசிவிட்டு மற்றவர்களை அலக்ஷியமாக கர்வத்தோடு ஒரு முறை பார்த்தது. ஆதிசேஷனும் கருடனும் சுதர்சன சக்கரத்தின் பேச்சை ஏற்பவர்களா? அவர்கள் இருவருக்கும் ''இந்த பேச்சில் சக்கரத்தின் கர்வம் தான் உள்ளது. எனவே இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் சங்கு கிட்டே ஞாயம் கேட்போம் '' என சங்கின் பக்கம் திரும்பின.)
ஆதிசேஷன்: '' ஹே பாஞ்சஜன்யம் சங்கமே, இந்த சக்ரத்தின் திமிர் பேச்சைக் கேட்டாயா? அமைதியாக இதுவரை இத்தனையும் கவனித்துக்கொண்டு ஏன் நீ பேசாமல் இருக்கிறாய். ஞாயத்தை எடுத்துச் சொல்''
சங்கம்: “நான் பேசமாட்டேன்” (சங்கு தலையை ஆட்டியது)
கருடன்: “சங்கே இந்த பிரச்னையில் நீ உன் அபிப்ராயம் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்”
சங்கு : ''சரி என்னைப் பேசாமல் இருக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்:
”நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. நம்மால் அவனுக்கு பெருமை எந்த விதத்திலும் இல்லை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணனின் திருவாய் இதழ் மலர்ந்தருளி அவனது மூச்சுக் காற்றின் சப்தம் என் மூலம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் ஜீவ நாதம். எனக்கென ஒரு செயலுமில்லை. நான் சொல்வது உங்களுக்கும் சேர்த்து தான், உலகில் அவனின்றி ஓர் அணுவும் அசையாது. உங்களின் தன்மையும் நாராயணின் கருணையால் உங்களிடம் சேரும் அபரிமித சக்தியும் உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்றுஇருங்கள். அது தான் உண்மை. அது தான் சரியானதும் கூட”.
++
சங்கின் பொறுப்புணர்ச்சி பதிலால் அங்கே நிசப்தம் நிலவியது. ஆதிசேஷன், கருடன், சங்கு சக்ரம் நால்வருமே தங்களுக்குள் நாராயணனை நினைத்து கொண்டிருந்த போதுதான் இதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான்.
அவன் விரும்பிய நாடகத்தை அவன் தான் கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டானே .