|
Post by Amritha Varshini on Dec 9, 2023 17:23:32 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி சித்ரா ராகவன்
ராகம் – பேகடா
பல்லவி
பாததூளி ஸ்பரிசத்தால் பாபங்கள் தீருதய்யா - நின் திவ்யரூப தரிசனத்தால் நன்மைகள் பெருகுதய்யா
சரணம்
மிடியோர் பசிப்பிணி போக்கிடவே பிடியரிசி திட்டம் வகுத்தாரைய்யா வேத பண்டிதர் வாழ்வில் ஒளிவீசிடவே வேத ரக்ஷண நிதி அமைத்தாரைய்யா
( பாததூளி ஸ்பரிசத்தால் )
சாஸ்திர விற்பன்னர் ஞானம் சிறந்திடவே வித்வத் சதஸ் பல அமைத்தாரைய்யா அர்ச்சகர் எளியோர் பலர் வாழ்வு சிறந்திடவே அறக்கட்டளை பல நிறுவினாரய்யா
( பாததூளி ஸ்பரிசத்தால் )
|
|