Post by Amritha Varshini on Nov 3, 2023 5:39:17 GMT 5.5
"இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுக் குடுப்பையா?!"-பெரியவா
(கருணைக் கரிசனத்தின் சிகர தரிசனம்)
ஸ்ரீசரணர் காலையில் ஜபம் செய்து கண் திறந்த போது கண்ணும் கண்ணீருமாக ஓர் இளைஞன் நின்று கொண்டிருக்கக் கண்டார். பரிவொழுக அவனை அருகழைத்து,"யாருப்பா?ஏம்பா அழறே?" என்று கேட்டார்.
அந்தக் கனிவில் இளைஞனின் அழுகை அதிகரித்து விட்டது. "ஒக்காருப்பா" என்று அவனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவன் அழுது அடங்குவதற்காக வள்ளிசாகப் பத்துப் பதினைந்து நிமிஷம் காத்துக் கொண்டிருந்தார்.
அழுகை அடங்க ஆரம்பித்ததும், "கவலைப்படாதேப்பா, ஒனக்கு என்ன வேணும்?" என்று குழைவாகக் கேட்டார்.
பையன் நன்றாகவே பேசலானான்.தன் பெயர்,ஊர் இத்யாதி சொல்லி,"படிப்பு முடிஞ்சு ரெண்டரை வருஷம் ஆறது.வேலை ஒண்ணும் கெடக்கலை,எத்தனையோ அப்ளிகேஷன் போட்டாச்சு, பலவிதமாக முயற்சி பண்ணியாச்சு.ஒண்ணும் பிரயோஜனப்படலை.
"ஆத்துல ரொம்ப இல்லாமை.ஸஹோதரிக்குக் கல்யாணம் பண்ணணும்கிறது வேறே! அதனால நொந்து போயிருக்கேன்.
"நானே என்னை நொந்துண்டிருக்கச்சே அப்பாவானா கண்டப்போ எல்லாம்,'தண்டம்,' 'தண்டம்'னு ஓயாமக் கரிச்சுக் கொட்டிண்டிண்டிருக்கார்.தண்ட சப்தம் கேட்டுக் கேட்டு என்னால தாங்கவே முடியலை. ஆத்துல இருக்கவே முடியாமத்தான்..."
மீண்டும் அழுகை.அதுவே பேசி முடித்தது, "ஆறுதல் பெற மூலஸ்தானம் ஸ்ரீசரணர் சந்நிதிதான் என்று தேடி வந்து விட்டேன்" என்பதை!.
"அப்பா கொழந்தே! நீ கொஞ்ச நேரம் மனஸைத் தேத்திக்கிண்டு இங்கேயே ஒக்காந்துண்டிரு. நான் கொஞ்சம் என் கார்யத்தை முடிச்சுண்டு வரேன்" என்றார் சரணர். தந்தையே தண்டமாகத் தள்ளியவனிடம் மனமொட்டிக் கூறினார்.
அவருடைய காரியமான அப்போது செய்ய வேண்டிய ஸ்நானத்தைச் செய்து அநுஷ்டானம் தொடங்கினார்.
தமது துறவறச் செங்கோலாகிய தண்டத்தால் அவர் தர்ப்பணம் செய்து முடிக்கவும் ஏதோ ஒரு வாரியத்தில் மேற்பார்வைப் பொறியியலாளராக இருந்த ஒரு பெரிய அதிகாரி தரிசனத்துக்கு வரவும் சரியாக இருந்தது.
பெரியவாள் தமது கையிலிருந்த துறவறத் திருக்கோலை அவரிடம் காட்டி,"இதுக்குப் பேர் என்ன?" என்று கேட்டார்.
அதிகாரி, "தண்டம்" என்றார்.
"இதுக்கு ஒரு வேலை போட்டுக் குடிப்பியா?: பெரியவாள் கேட்டார்.
அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. "பெரியவா என்ன சொல்றா,தெரியலியே!" என்றார்.
பெரியவாள் நமது இளைஞனை அவருக்குக் காட்டினார்; "பாவம் இந்தக் கொழந்தே.படிச்சு முடிச்சு ரெண்டரை வருஷம் ஆயும் வேலை கிடைக்காம மனஸ், நொந்துண்டிருக்கான். வெந்த புண்ல வேலா ஆத்து மனுஷாளே, நீ இப்போ (துறவுக்கோலைக் காட்டி) இதுக்கு ஒரு பேர் சொன்னியே,அதைச் சொல்லிச் சொல்லி இவனைத் திட்றாளாம்.அதுதான் ஒன்னைக் கேட்டேன். எனக்காக,உபாயமா ஏதோ ஒரு வேலை இவனுக்குப் போட்டுக்குடிப்பியா?" கெஞ்சுகிறாற் போலவே கேட்டார்.
கருணைக் கரிசனத்தின் சிகர தரிசனம்.
பெரியவாள் அப்படிச் சிறியவராக நின்று கேட்டது அதிகாரியை ஆட்டிவிட்டது."பெரியவா உத்தரவாப் போட வேண்டியதுதானே? பண்ணக் காத்துண்டிருக்கேன். இன்னிக்கு ஞாயித்துக் கெழமையாயிருக்கு.நாளைக்கு இந்தப் பையன் வந்தா பாத்து ஒடனே அப்பாயின்ட்மென்ட்க்கானதைப் பண்றேன்" என்று பவ்யமாகக் கூறினார்.
பெரியவாளின் அகமும் முகமும் மலர்ந்தன. "ஒரு தண்டத்துக்கு வேலை கெடச்சுடத்து.இன்னொரு தண்டத்துக்கு இப்போதைக்கு வேலை முடிஞ்சுடுத்து" என்று சிலேடை செய்தவாறு தமது துறவுத் திருக்கோலை அருகே சுவரில் சார்த்தினார்.
"தண்டம்னு கரிச்சுக் கொட்றாளே,அதுதான் எங்களுக்கும் ரக்ஷை.ப்ரம்மசாரிகளுக்கும் ரக்ஷை. ராஜ தண்டத்துக்கு அடங்கித்தான் லோகத்துல நீதி ந்யாயங்கள் இருந்தது.ஈச்வர ஸ்ருஷ்டில எதுவுமே தண்டமில்லே.எதுவுமே தண்டமில்லை என்றார்
(கருணைக் கரிசனத்தின் சிகர தரிசனம்)
ஸ்ரீசரணர் காலையில் ஜபம் செய்து கண் திறந்த போது கண்ணும் கண்ணீருமாக ஓர் இளைஞன் நின்று கொண்டிருக்கக் கண்டார். பரிவொழுக அவனை அருகழைத்து,"யாருப்பா?ஏம்பா அழறே?" என்று கேட்டார்.
அந்தக் கனிவில் இளைஞனின் அழுகை அதிகரித்து விட்டது. "ஒக்காருப்பா" என்று அவனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவன் அழுது அடங்குவதற்காக வள்ளிசாகப் பத்துப் பதினைந்து நிமிஷம் காத்துக் கொண்டிருந்தார்.
அழுகை அடங்க ஆரம்பித்ததும், "கவலைப்படாதேப்பா, ஒனக்கு என்ன வேணும்?" என்று குழைவாகக் கேட்டார்.
பையன் நன்றாகவே பேசலானான்.தன் பெயர்,ஊர் இத்யாதி சொல்லி,"படிப்பு முடிஞ்சு ரெண்டரை வருஷம் ஆறது.வேலை ஒண்ணும் கெடக்கலை,எத்தனையோ அப்ளிகேஷன் போட்டாச்சு, பலவிதமாக முயற்சி பண்ணியாச்சு.ஒண்ணும் பிரயோஜனப்படலை.
"ஆத்துல ரொம்ப இல்லாமை.ஸஹோதரிக்குக் கல்யாணம் பண்ணணும்கிறது வேறே! அதனால நொந்து போயிருக்கேன்.
"நானே என்னை நொந்துண்டிருக்கச்சே அப்பாவானா கண்டப்போ எல்லாம்,'தண்டம்,' 'தண்டம்'னு ஓயாமக் கரிச்சுக் கொட்டிண்டிண்டிருக்கார்.தண்ட சப்தம் கேட்டுக் கேட்டு என்னால தாங்கவே முடியலை. ஆத்துல இருக்கவே முடியாமத்தான்..."
மீண்டும் அழுகை.அதுவே பேசி முடித்தது, "ஆறுதல் பெற மூலஸ்தானம் ஸ்ரீசரணர் சந்நிதிதான் என்று தேடி வந்து விட்டேன்" என்பதை!.
"அப்பா கொழந்தே! நீ கொஞ்ச நேரம் மனஸைத் தேத்திக்கிண்டு இங்கேயே ஒக்காந்துண்டிரு. நான் கொஞ்சம் என் கார்யத்தை முடிச்சுண்டு வரேன்" என்றார் சரணர். தந்தையே தண்டமாகத் தள்ளியவனிடம் மனமொட்டிக் கூறினார்.
அவருடைய காரியமான அப்போது செய்ய வேண்டிய ஸ்நானத்தைச் செய்து அநுஷ்டானம் தொடங்கினார்.
தமது துறவறச் செங்கோலாகிய தண்டத்தால் அவர் தர்ப்பணம் செய்து முடிக்கவும் ஏதோ ஒரு வாரியத்தில் மேற்பார்வைப் பொறியியலாளராக இருந்த ஒரு பெரிய அதிகாரி தரிசனத்துக்கு வரவும் சரியாக இருந்தது.
பெரியவாள் தமது கையிலிருந்த துறவறத் திருக்கோலை அவரிடம் காட்டி,"இதுக்குப் பேர் என்ன?" என்று கேட்டார்.
அதிகாரி, "தண்டம்" என்றார்.
"இதுக்கு ஒரு வேலை போட்டுக் குடிப்பியா?: பெரியவாள் கேட்டார்.
அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. "பெரியவா என்ன சொல்றா,தெரியலியே!" என்றார்.
பெரியவாள் நமது இளைஞனை அவருக்குக் காட்டினார்; "பாவம் இந்தக் கொழந்தே.படிச்சு முடிச்சு ரெண்டரை வருஷம் ஆயும் வேலை கிடைக்காம மனஸ், நொந்துண்டிருக்கான். வெந்த புண்ல வேலா ஆத்து மனுஷாளே, நீ இப்போ (துறவுக்கோலைக் காட்டி) இதுக்கு ஒரு பேர் சொன்னியே,அதைச் சொல்லிச் சொல்லி இவனைத் திட்றாளாம்.அதுதான் ஒன்னைக் கேட்டேன். எனக்காக,உபாயமா ஏதோ ஒரு வேலை இவனுக்குப் போட்டுக்குடிப்பியா?" கெஞ்சுகிறாற் போலவே கேட்டார்.
கருணைக் கரிசனத்தின் சிகர தரிசனம்.
பெரியவாள் அப்படிச் சிறியவராக நின்று கேட்டது அதிகாரியை ஆட்டிவிட்டது."பெரியவா உத்தரவாப் போட வேண்டியதுதானே? பண்ணக் காத்துண்டிருக்கேன். இன்னிக்கு ஞாயித்துக் கெழமையாயிருக்கு.நாளைக்கு இந்தப் பையன் வந்தா பாத்து ஒடனே அப்பாயின்ட்மென்ட்க்கானதைப் பண்றேன்" என்று பவ்யமாகக் கூறினார்.
பெரியவாளின் அகமும் முகமும் மலர்ந்தன. "ஒரு தண்டத்துக்கு வேலை கெடச்சுடத்து.இன்னொரு தண்டத்துக்கு இப்போதைக்கு வேலை முடிஞ்சுடுத்து" என்று சிலேடை செய்தவாறு தமது துறவுத் திருக்கோலை அருகே சுவரில் சார்த்தினார்.
"தண்டம்னு கரிச்சுக் கொட்றாளே,அதுதான் எங்களுக்கும் ரக்ஷை.ப்ரம்மசாரிகளுக்கும் ரக்ஷை. ராஜ தண்டத்துக்கு அடங்கித்தான் லோகத்துல நீதி ந்யாயங்கள் இருந்தது.ஈச்வர ஸ்ருஷ்டில எதுவுமே தண்டமில்லே.எதுவுமே தண்டமில்லை என்றார்