|
Post by Amritha Varshini on Sept 30, 2023 5:41:17 GMT 5.5
உ
ஸ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் - சுருட்டி ; ஆதி தாளம்
பல்லவி
சார்ந்திருப்போம் சிவன் சாரை கூர்ந்து அருளுமே அவர் பார்வை
அனுபல்லவி
படி ஏற்றிடும் அவர் வார்த்தை மிடி நீக்கிடுமே அவர் வாழ்க்கை
( சார்ந்திருப்போம் )
சரணம்
நீர் அருந்தா தேகம் கொண்ட சித்தரே சார் எனும் நாமம் கொண்ட உத்தமரே குருவி போல் சிறிதுண்ணும் பிறவியே அருவி போல் அருட்பொழியும் துறவியே
( சார்ந்திருப்போம் )
பற்றறு நிலை கொண்ட ஞானியே வற்றாத க்ருபை புரியும் யோகியே கற்றவர் மெச்சும் ஒளி விளக்கே உற்ற துணையாய் இருக்கும் குருவே
( சார்ந்திருப்போம் )
|
|