|
Post by Amritha Varshini on Sept 14, 2023 5:36:46 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல் (ஆவணி அனுஷம்)
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் - பாகேஸ்ரீ ; ஆதி தாளம்
பல்லவி
பொன்னார் மேனியனை கண்ணாரக் கண்டேன் என்னார் அமுதை மனங்குளிர கண்டேன்
அனுபல்லவி
விழிகளில் நீர் உருக அகத்தினில் கண்டேன் மொழிகளில் அவர் பெருக அனுதினம் கண்டேன்
( பொன்னார் மேனியனை )
சரணம்
தாமரை போலும் செவ்விதழ் பாதங்கள் நான்மறை காத்திட ஓடிய பாதங்கள் நாடெங்கும் நடந்த திவ்ய பாதங்கள் வீடெங்கும் வணங்கும் பவித்ர பாதங்கள்
( பொன்னார் மேனியனை )
|
|