|
Post by Amritha Varshini on Aug 15, 2023 16:54:33 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ரவிச்சந்திரிகா
பல்லவி
நமக்கென்ன கவலை காருண்ய மூர்த்தி ஸ்ரீ பெரியவா இருக்கையிலே
அனுபல்லவி
புண்ணிய காஞ்சி மாநகரில் அருள் புரியும் காருண்ய வாரிதியாம்
( நமக்கென்ன கவலை )
சரணம்
வாழ்க்கை நாடகத்தில் சூத்ரதாரியாய் நீ இருந்திட அசையும் பொம்மையாய் நாங்கள் இருக்கிறோம் நகர்த்திடும் அசைவுகள் என்றும் நன்மை தந்திடுமே அன்பன் ஆனந்தமாய் பொற்பாதம் தொழுதிட
( நமக்கென்ன கவலை )
|
|