|
Post by Amritha Varshini on Jul 28, 2023 4:57:28 GMT 5.5
உ
சோபகிருத் ஆனி அனுஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் - சஹானா ; ஆதி தாளம்
பல்லவி
தூக்கிய கரம் தந்து ரக்ஷிப்பாய் - தடை நீக்கியே அருகினில் சேர்த்திடுவாய்
அனுபல்லவி
சிந்தையில் என்றென்றும் உறைந்திடுவாய் எந்தையே எமை என்றும் காத்திடுவாய்
சரணம்
செறிவுடன் ஞானம் எமக்கு அருளிடுவாய் அறிவுடன் வாழ்க்கை பயனுற செய்திடுவாய் பயம் நீக்கியே நின்னருள் பொழிந்திடுவாய் லயமாய் நின் பாதம் தந்திடுவாய்
|
|