Post by jksivan on Aug 14, 2013 21:08:18 GMT 5.5
ராஜாவின் குமுறல் 2
ஒரு மனிதன் எதிர்பார்த்தது, கனவு கண்டது , எல்லாம் கை வராமல் போனால் விரக்தி வருகிறது. பெருத்த ஏமாற்றம் அவனை உலுக்கி, உள்ளிருக்கும் அறிவை ஆட்டுவிக்கிறது. தான் செய்த குற்றம் தான் ஒருவனை கடைசிவரை முள்ளாய் குத்தி கொதறி அவனை அமைதி இழக்கச் செய்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? துன்பம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கச் செய்கிறதே. அது எது?
ஞானம் பிறக்க தியாகம் தேவையாயிருக்கிறதே!
இதெல்லாம் ஒருவன் தன்னுள் தான் நோக்கி அலசுவதன் வெளிப்பாடு. . உள்ளே சுத்தமானால் வாயில் வார்த்தை ஞானமாய் புறப்படுகிறது. பார்வை சமமாகிறது . எண்ணம் தெளிவாகிறது. . ராஜா சீர் பட்டு விட்டான்! புரிந்து கொண்டுவிட்டான் எது தேவை எது தேவையல்லாதது, எது நிரந்தரம், எது அழிவற்றது, எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும், எதில் நாட்டம், எதில் நோக்கம், என்று எல்லாம் தேடல் உள்ளே ஆரம்பித்துவிட்டதே
அதைத்தான் கீழே படித்து அனுவபிக்கிறோம்.
"நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வை விட்டு உ ன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?
அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடர் அ றுப்ப தெக்காலம்?
மனதை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?
கடத்துகின்ற தோணி தனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ தெக்காலம்?
நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ தெக்காலம்?
பொன்னும் வெள்ளியும்பூண்ட பொற்பதத்தை உள்அமைத்து
மின்னும் ஒளி வெளியே விட்டடைப்ப தெக்காலம்?
அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஓடுங்குவதும் எக்காலம்?
நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல்ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?
சூரியனின் காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?
இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவை ரசத்தைக் கண்டறிவ தெக்காலம்?
கருக் கொண்ட முட்டை தனை கடல்ஆமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனைஅடைவை தெக்காலம்?
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ தெக்காலம்?
கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்?
இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக் கொண்டாற் போல்
அருளை விழுங்கும்இருள் அகன்றுநிற்ப தெக்காலம்?
மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ தெக்காலம்?
கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்?
பூணுகின்ற பொன்அணிந்தால் பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ தெக்காலம்?
செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்?
ஆவியும் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்?
ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்?
எள்ளும் கரும்பும் எழுமலரும் காயமும்போல்
உள்ளும் புறமும்நின்று உற்றறிவ தெக்காலம்?"
ஐஸ் க்ரீம் கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பது போல் ராஜாவின் அருமையான "தேடல்கள்" நம்மை சிறிது சிறிதாக மகிழ்விக்கின்றன. இன்னும் கொஞ்சம் அடுத்த இதழில் வரட்டும். ராஜா நிறையவே சொல்லி இருக்கிறான்.
ஒரு மனிதன் எதிர்பார்த்தது, கனவு கண்டது , எல்லாம் கை வராமல் போனால் விரக்தி வருகிறது. பெருத்த ஏமாற்றம் அவனை உலுக்கி, உள்ளிருக்கும் அறிவை ஆட்டுவிக்கிறது. தான் செய்த குற்றம் தான் ஒருவனை கடைசிவரை முள்ளாய் குத்தி கொதறி அவனை அமைதி இழக்கச் செய்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? துன்பம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கச் செய்கிறதே. அது எது?
ஞானம் பிறக்க தியாகம் தேவையாயிருக்கிறதே!
இதெல்லாம் ஒருவன் தன்னுள் தான் நோக்கி அலசுவதன் வெளிப்பாடு. . உள்ளே சுத்தமானால் வாயில் வார்த்தை ஞானமாய் புறப்படுகிறது. பார்வை சமமாகிறது . எண்ணம் தெளிவாகிறது. . ராஜா சீர் பட்டு விட்டான்! புரிந்து கொண்டுவிட்டான் எது தேவை எது தேவையல்லாதது, எது நிரந்தரம், எது அழிவற்றது, எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும், எதில் நாட்டம், எதில் நோக்கம், என்று எல்லாம் தேடல் உள்ளே ஆரம்பித்துவிட்டதே
அதைத்தான் கீழே படித்து அனுவபிக்கிறோம்.
"நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வை விட்டு உ ன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?
அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடர் அ றுப்ப தெக்காலம்?
மனதை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?
கடத்துகின்ற தோணி தனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ தெக்காலம்?
நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ தெக்காலம்?
பொன்னும் வெள்ளியும்பூண்ட பொற்பதத்தை உள்அமைத்து
மின்னும் ஒளி வெளியே விட்டடைப்ப தெக்காலம்?
அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஓடுங்குவதும் எக்காலம்?
நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல்ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?
சூரியனின் காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?
இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவை ரசத்தைக் கண்டறிவ தெக்காலம்?
கருக் கொண்ட முட்டை தனை கடல்ஆமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனைஅடைவை தெக்காலம்?
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ தெக்காலம்?
கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்?
இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக் கொண்டாற் போல்
அருளை விழுங்கும்இருள் அகன்றுநிற்ப தெக்காலம்?
மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ தெக்காலம்?
கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்?
பூணுகின்ற பொன்அணிந்தால் பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ தெக்காலம்?
செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்?
ஆவியும் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்?
ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்?
எள்ளும் கரும்பும் எழுமலரும் காயமும்போல்
உள்ளும் புறமும்நின்று உற்றறிவ தெக்காலம்?"
ஐஸ் க்ரீம் கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பது போல் ராஜாவின் அருமையான "தேடல்கள்" நம்மை சிறிது சிறிதாக மகிழ்விக்கின்றன. இன்னும் கொஞ்சம் அடுத்த இதழில் வரட்டும். ராஜா நிறையவே சொல்லி இருக்கிறான்.