Post by Amritha Varshini on Jul 15, 2023 5:43:46 GMT 5.5
விராலி மலை முருகன் - நங்கநல்லூர் JK SIVAN
சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம் எட்டு - பத்து வருஷங்களுக்கு முன்பு என இங்கே எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி வருஷம் நினைவில் இல்லாத போது இப்படி ஒரு வசதி இருக்கிறதே.
திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி ஆலயங்களை தரிசிக்க வழக்கம்போல் நண்பர்க ளுடன் சென்றேன். திருச்சி அருகே வரும்போது எங்கள் வண்டியில் முருகன் திருப்புகழ் ஒன்றை ஒரு அன்பர் அவரே அமைத்த பாகேஸ்வரி ராகத்தில் கேட்க ரொம்ப நன்றாக இருந்தது. அவருக்கு நல்ல சங்கீத ஞானம் போல் இருக்கிறது. நல்ல குரல் வளம். பாடியபின் அதில் விராலி மலை என்று வருகிறதே அது கேள்விப்பட்ட பெயர். போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். ''விராலி மலை எங்கே இருக்கிறது என்றே தெரியாது''என் அருகில் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்த அருள் சாமி ''சார் அது எங்க ஊர். இங்கே தான் திருச்சிக்கு தெக்காலே 35 கி.மீ.தூரம். போவலாமுங்களா? என்கிறார்.'
'அடாடா இது சாதாரண அருள் சாமி சொல்வது இல்லை. முருகன் சாமியின் அருள் என்று தோன்றியது.
''நேரா விராலிமலைக்கு போங்கோ அருள்''. இப்பவே காலை 9 மணி. சீக்கிரம் போங்க. கோவில் மூடிட போறாங்க'
'''இல்லே சார். கோயில் மூடறத்துக்குள்ளே போயிடலாம்.''
விராலிமலை முருகன் கோயில் ரெண்டாயிரம் வருஷ கோவில். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஒன்றியத்தை சேர்ந்தது. து. விராலிமலை புதுக்கோட்டைக்கு தென்கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சிக்கு தெற்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரைக்கு வடக்கே 107 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலை அவ்வளவு பெரியதல்ல, பெரிசுகள் கூட கொம்பை ஊன்றிக்கொண்டு படிமேல் நடக்கலாம். மூச்சிரைக்காது. குளுகுளு காற்று தெம்பு கொடுக்கும்.
விராலி மலைக்கு இன்னொரு பெயர் சொர்ண விராலியங்கிரி.மூலவர் ஷண்முகநாதர் (ஆறுமுகம்), சரவணப் பொய்கை எனும் தீர்த்தம். இன்னொன்று நாக தீர்த்தம். எக்கச்சக்கமாக மயில்கள் தென்பட்டது.
இங்கே உள்ள சண்முகநாதன் அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்டவன். அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே ஒரு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்திக்கொண்டு இந்த பக்கம் வந்ததாக ஸ்தலபுராணம்.
வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் விராலி மலைக்கு வந்து தவமிருந்தனராம். இம்மலையில்தான் பரகாய ப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாத ருக்கு முருகப் பெம்மான் வழங்கியதாகச் சொல்வ துண்டு. திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் விராலிமலை பற்றி அருணகிரிநாதர் பாடி இருக்கிறார்.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் பக்தர்கள் விராலிமலைக்கு முருகனைத்தேடி வருகிறார்கள். விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றி யுள்ளார். பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சமயங்களில் எண்ணற்ற முருகபக்தர்களை விராலிமலையில் காணலாம்.
பிள்ளைச் செல்வம் வேண்டும் என்று இங்கே நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை விராலி முருகனிடம் கொடுத்து பிறகு குழந்தையின் மாமன் அல்லது சிற்றப்பன் மார்கள் விராலி முருகனுக்கு தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு ரொம்ப பிரபலம். என் சிறுவயதில் என் அம்மா வேடிக்கைக் காக ''உன்னை எங்கிருந்தோ ஒருத்தி கொண்டு வந்து என்னிடம் தட்டுக்கு விற்றாள்'' என்றபோது அதை நம்பி கையும் காலையும் உதைத்துக் கொண்டு நான் இந்த தவிட்டு வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தி ருக்கிறேன்.
கடைசியாக ஒரு வினோத விஷயம். விராலி மலை முருகனுக்கு சுருட்டுகளை நைவேத்தியம் செயகிறார்கள்! இது வேறு எந்த ஒரு முருகன் கோயிலிலும் காண முடியாத விசித்திரம், அதிசயம். சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் இங்கே மட்டும் தான். காரணம் ஒரு கதை ரூபத்தில் தெரிகிறது:
ஓ வென்ற புயல் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் பக்தர் எப்படி ஆற்றை கடப்பது என்று திகைத்து முருகா நீயே துணை என வேண்டுகிறார். அப்போது குளிரில் நடுங்கிக்கொண்டே ஒருவர் வருகிறார்.
''ஐயா, நீங்க பயப்படாதீங்க நானும் அக்கரை தான் போகணும்.எங்கே ஆழம் கம்மின்னு எனக்கு தெரியும், வாங்க கூட்டிட்டு போறேன்.குளிருலே உடம்பு நடுங்குது'' என்று கிழிசல்மேல் துண்டை விரித்து போர்த்திக்கொள்கிறார்
'பெரியவரே, இந்தாங்க என்கிட்டே சுருட்டு ஒண்ணு இருக்கு. பத்த வைச்சு தாரேன் , கொஞ்சம் சூடா, இதமாக இருக்கும் என்று சுருட்டை கொளித்தி கொடுக்க அவரும் சுகமாக சுருட்டை அனுபவித்ததார்.
இருவருமாக ஆற்றைக் கடந்து அக்கரை சென்றதும் அந்த புதியவர் திடீரென்று காணாமற் போய்விட்டார், எங்குமே ஜன நடமாட்டம் இல்லையே. எங்கே அந்த மனிதர். கருப்பமுத்து, எதிரே பார்க்கிறார், முருகன் கோயில் மலைமேல் .கிடுகிடுவென்று ஏறுகிறார். அங்கே......
ஷண்முகன் சந்நிதியில் மூலவர் முன்பு 'சுருட்டு'
!!''ஆஹா நிமிடம் சுருட்டு பெற்று அனுபவித்தவர் விராலி மலைத்தெய்வம் முருகனே'' என கருப்ப முத்து உணர்கிறார். அன்று முதல் சுருட்டு நைவேத்யம் என்கிறார்கள்.
சாமிக்கு சுருட்டை எல்லாம் நைவேத்தியம் பண்ணக் கூடாது என்று புதுக்கோட்டையை ராஜா தடை போட்டார். அவர் கனவில் முருகன் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான். இதை புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி தடை நீங்கியது.கக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.
மேலே சொன்னேனே நான் கேட்ட விராலி மலை அருணகிரியார் திருப்புகழ், அது இது
''மோதி இறுகிவட மேரு எனவளரு
மோக முலையசைய ...... வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மெனஅறிவு ...... கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை ...... வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி ...... யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ ...... ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
தோய வளர்கிரியி ...... னுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு ...... தம்பிரானே.
இதன் அர்த்தம் அழகாக எளிமையாக இருக்கிறது: அப்பா ஷண்முகா, விராலிமலை வள்ளி தேவயானை சமேதனெ, நான் மோகவசத்தால் வேசியரை நாடியவன். வடக்கே உள்ள மேரு மலை மாதிரி பெரிதாக, காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி என் அருகே வந்து, அழியும் அவர்கள் உடலைக் கொண்டு மோசம் செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகியவன். மூடத்தன்மை என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால், உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் என் சூக்ஷ்ம சரீரத்தின் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல், நீயே எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன் அடிமையாகிய நான் காணச் செய்வது என்றைக்கோ? '' வேத நாயகன் பிரம்மாவும் விஷ்ணுவும் பிணம் எரியும் சுடுகாட்டில் ஆடும் சிவனும் ஆக இந்த த்ரிமூர்த்திகளும் ஒன்றான உருவமாக குறையொன்றும் இல்லா திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமாதேவி என்ற பார்வதி தேவி ஈன்ற செல்வமே.ஷண்முகா, சோதியான ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள விராலி மலையின்இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள இந்த விராலி க்ஷேத்ரத்தில் அழகிய மயில் மேல் உலாவரும் என் தம்பிரானே. நீயே துணை '' என்கிறார் அருணகிரியார். எல்லா திருப்புகழ் பாடல்களிலும் காணும் ''பெருமாளே'' க்கு பதிலாக இந்த பாடலில் அன்பாக ''தம்பிரானே'' என்று முருகனை அழைக்கிறார் அருணகிரியார்.
நிறைய திருப்புகழ் பாடவேண்டும் என்று ஆசை குரல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ன செய்யலாம்? எனக்கும் சேர்த்து நீங்கள் எல்லோரும் பாடிவிடுங்கள்.
சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம் எட்டு - பத்து வருஷங்களுக்கு முன்பு என இங்கே எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி வருஷம் நினைவில் இல்லாத போது இப்படி ஒரு வசதி இருக்கிறதே.
திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி ஆலயங்களை தரிசிக்க வழக்கம்போல் நண்பர்க ளுடன் சென்றேன். திருச்சி அருகே வரும்போது எங்கள் வண்டியில் முருகன் திருப்புகழ் ஒன்றை ஒரு அன்பர் அவரே அமைத்த பாகேஸ்வரி ராகத்தில் கேட்க ரொம்ப நன்றாக இருந்தது. அவருக்கு நல்ல சங்கீத ஞானம் போல் இருக்கிறது. நல்ல குரல் வளம். பாடியபின் அதில் விராலி மலை என்று வருகிறதே அது கேள்விப்பட்ட பெயர். போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். ''விராலி மலை எங்கே இருக்கிறது என்றே தெரியாது''என் அருகில் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்த அருள் சாமி ''சார் அது எங்க ஊர். இங்கே தான் திருச்சிக்கு தெக்காலே 35 கி.மீ.தூரம். போவலாமுங்களா? என்கிறார்.'
'அடாடா இது சாதாரண அருள் சாமி சொல்வது இல்லை. முருகன் சாமியின் அருள் என்று தோன்றியது.
''நேரா விராலிமலைக்கு போங்கோ அருள்''. இப்பவே காலை 9 மணி. சீக்கிரம் போங்க. கோவில் மூடிட போறாங்க'
'''இல்லே சார். கோயில் மூடறத்துக்குள்ளே போயிடலாம்.''
விராலிமலை முருகன் கோயில் ரெண்டாயிரம் வருஷ கோவில். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஒன்றியத்தை சேர்ந்தது. து. விராலிமலை புதுக்கோட்டைக்கு தென்கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சிக்கு தெற்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரைக்கு வடக்கே 107 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலை அவ்வளவு பெரியதல்ல, பெரிசுகள் கூட கொம்பை ஊன்றிக்கொண்டு படிமேல் நடக்கலாம். மூச்சிரைக்காது. குளுகுளு காற்று தெம்பு கொடுக்கும்.
விராலி மலைக்கு இன்னொரு பெயர் சொர்ண விராலியங்கிரி.மூலவர் ஷண்முகநாதர் (ஆறுமுகம்), சரவணப் பொய்கை எனும் தீர்த்தம். இன்னொன்று நாக தீர்த்தம். எக்கச்சக்கமாக மயில்கள் தென்பட்டது.
இங்கே உள்ள சண்முகநாதன் அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்டவன். அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே ஒரு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்திக்கொண்டு இந்த பக்கம் வந்ததாக ஸ்தலபுராணம்.
வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் விராலி மலைக்கு வந்து தவமிருந்தனராம். இம்மலையில்தான் பரகாய ப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாத ருக்கு முருகப் பெம்மான் வழங்கியதாகச் சொல்வ துண்டு. திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் விராலிமலை பற்றி அருணகிரிநாதர் பாடி இருக்கிறார்.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் பக்தர்கள் விராலிமலைக்கு முருகனைத்தேடி வருகிறார்கள். விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றி யுள்ளார். பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சமயங்களில் எண்ணற்ற முருகபக்தர்களை விராலிமலையில் காணலாம்.
பிள்ளைச் செல்வம் வேண்டும் என்று இங்கே நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை விராலி முருகனிடம் கொடுத்து பிறகு குழந்தையின் மாமன் அல்லது சிற்றப்பன் மார்கள் விராலி முருகனுக்கு தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு ரொம்ப பிரபலம். என் சிறுவயதில் என் அம்மா வேடிக்கைக் காக ''உன்னை எங்கிருந்தோ ஒருத்தி கொண்டு வந்து என்னிடம் தட்டுக்கு விற்றாள்'' என்றபோது அதை நம்பி கையும் காலையும் உதைத்துக் கொண்டு நான் இந்த தவிட்டு வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தி ருக்கிறேன்.
கடைசியாக ஒரு வினோத விஷயம். விராலி மலை முருகனுக்கு சுருட்டுகளை நைவேத்தியம் செயகிறார்கள்! இது வேறு எந்த ஒரு முருகன் கோயிலிலும் காண முடியாத விசித்திரம், அதிசயம். சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் இங்கே மட்டும் தான். காரணம் ஒரு கதை ரூபத்தில் தெரிகிறது:
ஓ வென்ற புயல் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் பக்தர் எப்படி ஆற்றை கடப்பது என்று திகைத்து முருகா நீயே துணை என வேண்டுகிறார். அப்போது குளிரில் நடுங்கிக்கொண்டே ஒருவர் வருகிறார்.
''ஐயா, நீங்க பயப்படாதீங்க நானும் அக்கரை தான் போகணும்.எங்கே ஆழம் கம்மின்னு எனக்கு தெரியும், வாங்க கூட்டிட்டு போறேன்.குளிருலே உடம்பு நடுங்குது'' என்று கிழிசல்மேல் துண்டை விரித்து போர்த்திக்கொள்கிறார்
'பெரியவரே, இந்தாங்க என்கிட்டே சுருட்டு ஒண்ணு இருக்கு. பத்த வைச்சு தாரேன் , கொஞ்சம் சூடா, இதமாக இருக்கும் என்று சுருட்டை கொளித்தி கொடுக்க அவரும் சுகமாக சுருட்டை அனுபவித்ததார்.
இருவருமாக ஆற்றைக் கடந்து அக்கரை சென்றதும் அந்த புதியவர் திடீரென்று காணாமற் போய்விட்டார், எங்குமே ஜன நடமாட்டம் இல்லையே. எங்கே அந்த மனிதர். கருப்பமுத்து, எதிரே பார்க்கிறார், முருகன் கோயில் மலைமேல் .கிடுகிடுவென்று ஏறுகிறார். அங்கே......
ஷண்முகன் சந்நிதியில் மூலவர் முன்பு 'சுருட்டு'
!!''ஆஹா நிமிடம் சுருட்டு பெற்று அனுபவித்தவர் விராலி மலைத்தெய்வம் முருகனே'' என கருப்ப முத்து உணர்கிறார். அன்று முதல் சுருட்டு நைவேத்யம் என்கிறார்கள்.
சாமிக்கு சுருட்டை எல்லாம் நைவேத்தியம் பண்ணக் கூடாது என்று புதுக்கோட்டையை ராஜா தடை போட்டார். அவர் கனவில் முருகன் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான். இதை புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி தடை நீங்கியது.கக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.
மேலே சொன்னேனே நான் கேட்ட விராலி மலை அருணகிரியார் திருப்புகழ், அது இது
''மோதி இறுகிவட மேரு எனவளரு
மோக முலையசைய ...... வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மெனஅறிவு ...... கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை ...... வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி ...... யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ ...... ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
தோய வளர்கிரியி ...... னுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு ...... தம்பிரானே.
இதன் அர்த்தம் அழகாக எளிமையாக இருக்கிறது: அப்பா ஷண்முகா, விராலிமலை வள்ளி தேவயானை சமேதனெ, நான் மோகவசத்தால் வேசியரை நாடியவன். வடக்கே உள்ள மேரு மலை மாதிரி பெரிதாக, காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி என் அருகே வந்து, அழியும் அவர்கள் உடலைக் கொண்டு மோசம் செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகியவன். மூடத்தன்மை என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால், உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் என் சூக்ஷ்ம சரீரத்தின் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல், நீயே எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன் அடிமையாகிய நான் காணச் செய்வது என்றைக்கோ? '' வேத நாயகன் பிரம்மாவும் விஷ்ணுவும் பிணம் எரியும் சுடுகாட்டில் ஆடும் சிவனும் ஆக இந்த த்ரிமூர்த்திகளும் ஒன்றான உருவமாக குறையொன்றும் இல்லா திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமாதேவி என்ற பார்வதி தேவி ஈன்ற செல்வமே.ஷண்முகா, சோதியான ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள விராலி மலையின்இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள இந்த விராலி க்ஷேத்ரத்தில் அழகிய மயில் மேல் உலாவரும் என் தம்பிரானே. நீயே துணை '' என்கிறார் அருணகிரியார். எல்லா திருப்புகழ் பாடல்களிலும் காணும் ''பெருமாளே'' க்கு பதிலாக இந்த பாடலில் அன்பாக ''தம்பிரானே'' என்று முருகனை அழைக்கிறார் அருணகிரியார்.
நிறைய திருப்புகழ் பாடவேண்டும் என்று ஆசை குரல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ன செய்யலாம்? எனக்கும் சேர்த்து நீங்கள் எல்லோரும் பாடிவிடுங்கள்.