|
Post by Amritha Varshini on Jun 27, 2023 5:01:43 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
இப்பாடல் கொரோனா தொற்று ஊரடங்கின் போது திரு பாபநாசம் சிவனின் நான் ஒரு விளையாட்டு பொம்மையா பாடலை ஒற்றி எழுதிய பாடல்.
ராகம் - நவரச கானடா
பல்லவி
யாம் ஒரு விளையாடும் பறவையா ஜகத்குருவே சிவமே உந்தனுக்கு
அனுபல்லவி
சிறகுகள் இன்றி கூட்டினுள் உழன்றது போதாதா உந்தனுக்கு
( யாம் ஒரு விளையாடும் )
சரணம்
அடைபட்ட பறவைகள் பெரியவா பெரியவா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தோமே திருவுள்ளம் இறங்காதா பெரியவா உந்தனுக்கு
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|