|
Post by Amritha Varshini on May 13, 2023 17:37:40 GMT 5.5
உ
உலக அன்னை மீது ஓர் தமிழ்ப் பாடல்
ராகம் – கல்யாணி / தாளம் - ஆதி
பல்லவி
அன்னையை எந்நாளும் வணங்கிடுவோம் அன்பினை எப்பொழுதும் பெற்றிடுவோம்
அனுபல்லவி
கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் ஊரும் எறும்பிற்கும் படியளக்கும்
( அன்னையை எந்நாளும் )
சோலை வனத்தில் பூக்களாய் மலர்பவள் பாலை வனத்தில் அருள்மழை பொழிபவள்
சாதிமத மொழியின பேதங்கள் இல்லை அன்னையின் அன்பிற்கோர் எல்லையும் இல்லை
( அன்னையை எந்நாளும் )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|