|
Post by Amritha Varshini on May 8, 2023 5:14:05 GMT 5.5
ஸ்ரீ மஹா பெரியவாளின் வாக்கியங்கள்
'பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும் உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்'
[ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா]
என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார்.
‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று கூறுபவரே,
‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’ என்கிறார்.
(ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித: ).
இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.
‘இது என்ன குழப்புகிறாயே’ என்றால்,
‘நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய: )
அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத: )’ என்று ஒரு போடு போடுகிறார்.
|
|