|
Post by Amritha Varshini on Apr 29, 2023 17:49:51 GMT 5.5
உ
அனுஷத்தை முன்னிட்டு ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
ராகம் - புன்னாகவராளி ; ஆதி தாளம்
பல்லவி
காஞ்சி நகருக்கு வாருங்கள் குருவின் தரிசனம் காணுங்கள்
அனுபல்லவி
அருள் மழையில் நனைந்திட வாருங்கள் ஆனந்தம் பெருகிடும் விரைந்து வாருங்கள்
( காஞ்சி நகருக்கு )
சரணம்
தெய்வத்தின் குரலை ஊன்றி படியுங்கள் நல்வழி பிறந்திடும் நம்பிக்கை கொள்ளுங்கள் தீவினை தீர்ந்திடும் தெரிந்து கொள்ளுங்கள் நல்வினை பெருகிடும் அறிந்து கொள்ளுங்கள்
( காஞ்சி நகருக்கு )
ஆடும்-மனம் அடங்கும் தெரிந்து கொள்ளுங்கள் வாடும்-நிலை மாறும் புரிந்து கொள்ளுங்கள் பாதை சீராகும் புரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கை பயனுறும் மகிழ்ச்சி கொள்ளுங்கள்
( காஞ்சி நகருக்கு )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
[/b]
|
|