|
Post by Amritha Varshini on Mar 13, 2023 5:39:47 GMT 5.5
உ
அனுஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் - சந்திரகவுன்ஸ் ; ஏக தாளம்
பல்லவி
நாவினால் நின் நாமம் இயம்ப வேண்டும் தமிழ்ப்
பாவினால் நின் புகழ் பாட வேண்டும்
அனுபல்லவி
சிந்தனையில் எப்போதும் நிறைய வேண்டும்
அந்நினைவில் முப்போதும் மகிழ வேண்டும்
( நாவினால் நின் நாமம் )
சரணம்
நெருக்கடி நிலையினை விலக்கிடும் குருவே
தவித்திடும் மனதை குளிர்த்திடும் திருவே
அள்ளக்குறையா பொங்கும் அக்ஷய பாத்திரமே
கள்ளமிலா மனம் கொண்ட அன்ன பூரணியே
( நாவினால் நின் நாமம் )
சங்கடம் தீர்த்திடும் கிருபா சங்கரனே
இன்னல் நீக்கிடும் காருண்ய வாரிதியே
துவளா மனம் தரும் சிதானந்த ஸ்வரூபமே
மனதின் ஊற்றாய் விளங்கும் ப்ரஹ்மானந்தமே
( நாவினால் நின் நாமம் )
|
|