|
Post by Amritha Varshini on Mar 12, 2023 5:50:27 GMT 5.5
சர்வ ஜகத்தும் பரமேஸ்வரனுடைய சரீரம். அதற்கு அப்பிடியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்ச பூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீ தான் ஆகாசமும் நீ தான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீ தான். நீயே எல்லா ஸ்வரூபமாயும் ஆகியிருக்கிறாய். கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்தில் இருக்கும்படியான ஞானம் ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீ தான். ஸமஸ்த பிரபஞ்சமும் உன் பரிமாணத்தைத் தவிற வேறொன்றும் கிடையாது. சிவன் சரீரி நீ அவனுக்குச் சரீரம். சிவ யுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆச்சார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லி இருக்கிறார்கள்.
|
|