Post by Amritha Varshini on Mar 1, 2023 6:09:04 GMT 5.5
நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார்.
குழந்தையைப் பார்த்து 'உம்மாச்சி தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்' என்று அவர் சொன்னார்.
உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தையின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தைகள் மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா.
உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை. "உம்மாச்சி" என்பது யாரைக் குறிக்கிறது?"
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன் அங்கே ஒருவரை உம்மாச்சு என்று குறிப்பிட்டார்கள்.
அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள் அவர்களில் திருநல்லமென்னும் கோனேரிராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருனல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமா மஹேஸ்வரர். அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த ஒருவர் அங்கே இருந்தார். அவரைத்தான் 'உம்மாச்சு' என்று கூப்பிட்டார்கள்.
ஆகவே உமா மஹேஸ்வரர் என்பது 'உம்மாச்சு' என்று ஆயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று.
ஆகையால் குழந்தைகள் பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமா மஹேஸ்வரர் என்பது தெரிந்தது.
அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.
குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமா மஹேஸ்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்திற்கு பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் க்ரோதங்கள் இல்லை. குழந்தையாக இரு என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணங்கள் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாத போது வருவது தான் உபநிஷத். உபநிஷத்தும் குழந்தையுனுடைய வார்த்தையும் ஒன்று தான். இந்த இரண்டும் பரமேஸ்வரரைச் சொல்லுகின்றன. பகவாதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாமெல்லாம் சிவ த்யானம் செய்ய வேண்டும். சிவ நாமோச்சரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அது தான்.
குழந்தையைப் பார்த்து 'உம்மாச்சி தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்' என்று அவர் சொன்னார்.
உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தையின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தைகள் மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா.
உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை. "உம்மாச்சி" என்பது யாரைக் குறிக்கிறது?"
ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன் அங்கே ஒருவரை உம்மாச்சு என்று குறிப்பிட்டார்கள்.
அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள் அவர்களில் திருநல்லமென்னும் கோனேரிராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருனல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமா மஹேஸ்வரர். அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த ஒருவர் அங்கே இருந்தார். அவரைத்தான் 'உம்மாச்சு' என்று கூப்பிட்டார்கள்.
ஆகவே உமா மஹேஸ்வரர் என்பது 'உம்மாச்சு' என்று ஆயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று.
ஆகையால் குழந்தைகள் பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமா மஹேஸ்வரர் என்பது தெரிந்தது.
அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.
குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமா மஹேஸ்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்திற்கு பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் க்ரோதங்கள் இல்லை. குழந்தையாக இரு என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணங்கள் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாத போது வருவது தான் உபநிஷத். உபநிஷத்தும் குழந்தையுனுடைய வார்த்தையும் ஒன்று தான். இந்த இரண்டும் பரமேஸ்வரரைச் சொல்லுகின்றன. பகவாதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாமெல்லாம் சிவ த்யானம் செய்ய வேண்டும். சிவ நாமோச்சரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அது தான்.