Post by jksivan on Aug 14, 2013 20:50:54 GMT 5.5
நமது பாரதத் தாயின் எண்ணற்ற புத்ரர்களில் சிலர் மட்டுமே நமது நாட்டுக்கு மட்டுமல்ல, ஏனையோர்க்கும் ஒளிவிளக்காக திகழ்ந்தவர்கள். ஒரு சிலரை அடையாளம் காண்போமே என்பதற்காக எடுக்கப்பட்ட இம்முயற்சி ஒவ்வொரு இதழிலும் ஒரு ஒளிவிளக்கின் பிரகாசத்தை வீசட்டும். அறியாதவர்களுக்கு புதிதாகவும் அறிந்தவர்களுக்கு தெரிந்ததை நினைவூட்டும் பணி புரியட்டும்.
ஒளி விளக்கு 1
மகரிஷி அரவிந்தர்
இன்னும் ஒரு சில தினங்களில் நமது தேசத்தின் சுதந்திர நாளை நாம் கொண்டாடப்போகிறோம். இந்த நேரத்தில் பாண்டிச்சேரி என்றவுடனேயே அதே மூச்சில் அரவிந்தாச்ரமம் என நாம் நினைக்கும் அரவிந்த மகரிஷியை பற்றியே இந்த கட்டுரைத்தொடர் ஆரம்பமாகிறது.
பிறந்தது 1872 ம் வருஷம் -- சுதந்திர நன்னாளாக நாம் கொண்டாடும் ஆகஸ்ட் 15ம் நாள். தாம் பிறந்த நாளில் நம் தாய்நாடே ஒருநாள் அந்நிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெரும் என்ற அறிகுறியோடு பிறந்தவர் இவர் என்று கொள்ள முடிகிறது.
நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஏழு வயசிலேயே தனது இரு சகோதரர்களோடு இங்கிலாந்து சென்று படித்தவர். பதினாலு வருஷங்கள் அங்கு இருந்தார். ஆங்கிலேய குடும்ப வாழ்க்கையில் பழக்கமானது. புனித பால் பள்ளியில் படிப்பு. (1884-1890) அரசர் கல்லூரியில் மேல் படிப்பு. நன்றாக படித்ததால் மேல் படிப்புக்கு தகுதி இலவசமாகவே கிடைத்தது. ரெண்டே வருஷத்தில் தேர்வடைந்து விட்டு. மேலே இந்திய ஊழிய சேவை தகுதி (ics ) பயிற்சி பெற்றார். ஆனால் அந்த காலத்தில் ஒரு உயர்ந்த அதிகாரி பெரும் பயிற்சிக்கு குதிரை ஏற்றம் அவசியம். குதிரை சவாரி தேர்வில் பங்கேற்க வில்லை என்ற காரணத்தால் பயிற்சி முற்றுப்பெறவில்லை. .
அரவிந்தர் இங்கிலாந்தில் இருந்த கால கட்டத்தில் அங்கு பரோடா மாநில கெயிக்வார் மகாராஜாவும் இருந்தார். அந்த மன்னரின் பரிச்சயம் ஏற்பட்ட பின்பு அரவிந்தர் பரோடா மாநிலத்தில் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார் . எனவே 1893 ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி பரோடா சென்றார் பதவியேற்க.
பரோடாவில் அரவிந்தர் மிகச்சிறப்பாக நிர்வாகம் செய்து பதிமூன்று ஆண்டுகள் பெரும் புகழும் பெற்றார். வருவாய்த்துறையிலும் பிறகு வரி வசூல் பிரிவிலும் பரோடாவின் நிதிநிலைமையை சீரமைத்தார். பின்னர் அரசரின் அபிமானத்தால் ஆட்சி நிர்வாகம் பொறுப்பு வந்தடைந்தது.
பிறகு கல்வித்துறையில் ஆங்கில விரிவுரையாளராக பதவி ஏற்றார். பின்னர் அவர் விகித்த உத்தியோகம் எது தெரியுமா. பரோடா கல்லூரியின் முதல்வராக.
இதெல்லாம் எதற்கு தெரிவித்தேன் என்றால் அரவிந்தரின் கல்வியறிவு, நிர்வாக பொறுப்பு எல்லாம் எந்த அடிப்படையில் அமைந்தது என்று அறிவுறுத்த.
கவிதையில் பற்று அவரை பின்னர் ஆட்கொண்டது.
அவர் அந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகள் தொகுப்பாக பின்னால் பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இவற்றில் அவரது எதிர்கால வாழ்க்கையின் அடிச்சுவடுகள் தென்படும்.
இங்கிலாந்து தேசத்தில் அவர் இருந்ததே அரவீந்தரின் தந்தையின் கனவை மெய்ப்பிக்க. அவரது தந்தைக்கு தனது மகன் மேலை நாட்டு க்கல்வி பெறவேண்டும் என்ற ஆவல். மேலை நாட்டு மக்களின் வாழ்க்கை அவர் வாழ வேண்டும் என்ற ஆசை. இந்தியாவைபற்றியோ கீழை நாட்டு நிலைமையோ தெரியாமல் வளர்க்கப்பட்டவர் அரவிந்தர்.'
பரோடா வாழ்க்கை அவரை நமது நாட்டு கலாச்சாரம், பண்பு, தேசியம் ஆகியவற்றிற்கு நெருங்க வைத்தது. பரோடாவில் இருந்தபோது வடமொழி கற்றார். நம் நாட்டு மொழிகள் வரலாற்றை ஆராய்ந்தார். நமது கலாச்சாரத்தின் மேன்மை புலப்பட்டது. அவரை ஈர்த்தது.
பரோடா வாழ்க்கை இந்தியாவின் அரசியல் நிலைமையையும் புரிய வைத்தது. இந்திய அரசியலில் நேராக பங்கு கொள்ள அவரது பரோடா மாநில உத்தியோகம் இடம் கொடுக்கவில்லை.
அவர் பிறந்த வங்காள தேசம் 1905ல் பிரிவினைக்கு தயாரானது. அதனால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் இருந்த பொது தான் அரவிந்தர் தனது பரோடா உத்தியோகத்தை விட்டுவிட முடிவெடுத்து அரசியலில் இறங்கினார்.
முதல் கட்டமாக கல்கத்தா தேசிய கல்லூரியில் முதல்வராக பணி ஏற்றார்.
சுருக்கமாக சொன்னால் 1902 முதல் 1910 வரை நேரடியாக அரசியில் பிரவேசிக்காமல் ஈடுபாடுகளில் மறைமுகமாக தொடர்பிருந்தது. தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் சுதேசி இயக்கத்தில் ஈடுபடுத்தினார். வந்கப்பிரிவு அவரை நேரடியாக அரசியலில் இறங்க வைத்த ஒரு சம்பவமானது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய சமயம் அது. அதில் சேர்ந்து கொண்டார். அதிலேயே தீவிர வாதம் மிதவாதம் என்று இரு கட்சியாக இருந்தது. மிதவாதிகளை எதிர்ப்போரில் அரவிந்தரும் இருந்தார். ஒத்துழையாமை இயக்கம் உருவான நேரம் அது.
மறைமுக அரசியல் வேண்டாம். வெளிப்படையாக வங்காளத்தில் அகில இந்திய கட்சி ஒன்று தேசிய பாதையில் மக்களை இட்டுச்செல்ல வேண்டும். அதற்கு தலைவராக தகுதி பெற்றவர் பால கங்காதர திலகர். அவரையே தலைவராக கொள்ளவேண்டும் என்று அரவிந்தர் யோசனை கூறினார். மிதவாதிகளிடமிருந்த அதிகாரங்களை பறிக்க வேண்டும் என்று அரவிந்தர் வங்கத்தலைவர்களை அழைத்தார். தேசிய அளவில் இந்த கட்சி வளர்ந்தது. சுயராஜ்யம் குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஒத்துழையாமையை அறிவித்தது. மேலைநாட்டு பொருள்களுக்கு தீ வைத்து அழித்தது மட்டுமல்லாமல் சுதேசிப்பொருள்களையே ஆதரித்தது இந்த தீவிரவாதிகளின் கட்சி. வெள்ளையரின் நீதிமன்றம், கல்விக்கூடங்கள், பல்கலைக்கழக பதவிகள், பட்டங்கள் அனைத்தும் துறந்து, புறக்கணிக்க தூண்டியது.
மேலை நாட்டு அரசாட்சியை எதிர்த்து நமக்குள் நாமே ஒரு கட்சி, தலைமை, அரசாங்கம், நிர்வாகம் என்றெல்லாம் ஏற்படுத்திக்கொள்ள தூண்டியது இந்த கட்சி. சுதந்திரம் குறிக்கோளாக அமைத்துக்கொண்டது.
கொள்கைகளை ப்பரப்ப ஒரு பத்திரிகை தொடங்கினார். வந்தே மாதரம் என்று அதற்கு பெயர் . அதன் நிர்வாக ஆசிரியர் அரவிந்தர். 1907ல் பிறந்த இந்த பத்திரிகை ஒரு வருட காலமே நிலைத்தது. ஆசிரியர் அரவிந்தர் சிறைப்பட்டார். சிறையிலிருந்தே அதை நிர்வாகம் செய்தார். அதற்குள் அதன் பெருமை இந்தியா முழுதும் சேர்ந்தடைந்தது
1907ல் தேசிய விரோதியாக குற்றம் சாட்டப்பட்டாலும் அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட தொண்டர்களும் தலைவர்களும் அரவிந்தரையே தலைவராக நியமித்தனர். இந்திய சுதேசி, தேசிய கட்சியின் தலைவராக அரவிந்தரானார். 1907 சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சபாநாயகர் அரவிந்தர். அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரை கைதுசெய்தது வெள்ளையர் அரசாங்கம். எந்த தடையமும் இன்றி கைது செய்யப்பட அரவிந்தர் விடுதலையானார். ஒருவருடத்திற்குமேல் அலிப்பூர் சிறையில் இருந்த அரவிந்தர் 1909ல் வெளிவருவதற்குமுன் சிரியிளிருந்தே ஆன்மீக நூல்கள் எழுதினர்.
கிருஷ்ணனின் தரிசனம் பெற்றதாக ஒரு நிகழ்ச்சி அங்கு உண்டு. இதற்குள் அவர்கள் கட்சி கலைந்தது. தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திக்கு வேராக்கப்பட்டனர். அரவிந்தர் மீண்டும் அதைத்துளிர்க்க முயன்றார். தன்னந்தனியராக பாடு பட்டார். கர்மயோகி என்ற ஆங்கில நாளிதழ் வெளிக்கொணர்ந்தார். தர்மா என்ற வங்காள மொழி வாராந்திர இதழும் வெளிவந்தது. நாடு தன்னுடைய தீவிர சுதந்திர திட்டத்துக்கு இன்னும் தயாராக வில்லை ல் என்று புரிந்து கொண்டார் அரவிந்தர் . காந்தியடிகளின் மித வாதம் தென்னாப்ரிக்காவில் சூடு பிடிப்பதை அறிந்தார். இந்தியாவில் ஒற்றுமையாக அனைவரும் இணைந்தால் அத்தகைய திட்டம் வெற்றிபெற வாய்ப்பு பற்றி சிந்தித்தார். தான் இந்த வகை செயல்பாட்டுக்கு தக்க தலைவராக இருக்க முடியாது என்று உணர்ந்தார்.
அலிப்பூர் சிறையில் இருந்த ஒருவருஷ காலம் அவரை ஆன்மீகத்துறைக்கு அழைத்து சென்றது. யோகத்தில் ஆழ்ந்தார். அரவிந்தர் மகரிஷியானார். 1910 பிப்ரவரியில் சந்திரனாகூரில் அரசியலிலிருந்து விலகி பாண்டிச்சேரிக்கு கப்பல் ஏறினார். கர்ம யோகியில் அவரது கட்டுரை ஒன்றை எதிர்த்து ஆங்கிலேய அரசாங்கம் அவர்மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அவர் பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் குடி பெயர்ந்ததால் அவரை அணுகமுடியவில்லை. எனவே அந்த பத்திரிகையின் பிரசுரகர்த்தா சிறைபட்டார். கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடியானது.
வங்காளத்தில் மக்கள் அவரை மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டியும் ஆன்மீக உலகில் பிரவேசித்த அரவிந்த யோகி அரசியலுக்கு த்திரும்பவில்லை.
1914ல் பாண்டியில் ஆர்யா என்ற மாத இதழ் தத்துவ பத்திரிகையாக வெளிவந்தது. கீதை விளக்க கட்டுரைகள் வெளிவந்தன. இசாவாச்யோபநிஷத் விளக்க உரை ஆர்வமாக பக்தர்களால் படிக்கப்பட்டது. இந்திய கலாசாரம், ஆன்மீக உணர்ச்சி, வேத நெறிமுறைகள், யோக பயிற்சி அனைத்தும் ஆர்யாவில் போதிக்கப்பட்டது. கவிதை நயம், மக்கள் மன வளர்ச்சி வேதாகம விளக்கம் அனைத்தும் அறிவுக்களஞ்சியமாக கிடைத்தது. எனினும் 1921ல் ஆர்யா நின்று போனது. நன்கு ஐந்து சிஷ்யர்களுடன் அரவிந்த மகரிஷி பாண்டியில் வசித்தார். அவரது ஆன்மீகப்பணியில் அனைவரும் சீடராக இணைந்தனர். எண்ணற்ற சாதகர்கள் அனைத்தும் துறந்து அரவிந்தரே சரணம் என்று கூடியதால் ஒரு இயக்கம் உருவானது. ஸ்ரீ அரவிந்தர் ஆஷ்ரமம் பாண்டிச்சேரியில் உண்டானது. தெய்வீக உறவு அனைவருக்கும் கிட்டியது.
துறவி அரவிந்தர் அனைவரின் இதயத்தில் அமைதி அமைதிக்கு வழிகாட்டினார். மனங்கள் ஒன்றின. ஆன்ம தியானம் அனைவருக்கும் கிட்டியது. எல்லோர் மனத்திலும் ஆன்ம ஒழி வீச வைத்த அந்த தூங்கா விளக்கு 1950 டிசம்பர் 5 அன்று சமாதி அடைந்தது.
அரவிந்தருக்குப்பிறகு அன்னை பொறுப்பேற்று ஆஸ்ரம சேவை செய்தார். 1973 நவம்பர் 17 அவரும் அரவிந்தர் சமாதிக்கருகிலேயே அடைக்கலமானார். இருவரின் ஆன்ம ஒளி அமைதி காத்து தியானிக்கும் நமது ல் நெஞ்சங்களில் இன்ப உணர்வை ஊட்டி வருகிறது.