|
Post by Amritha Varshini on Jan 26, 2023 6:48:45 GMT 5.5
உ
ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் - வசந்தா / ஆதி தாளம் பல்லவி கலைகளை அருளிடும் கலைவாணியே நின் கழலினைப் பணிந்திட அருள் புரிவாயம்மா அனுபல்லவி திருக்கோவில் உனக்கு இல்லையென்றாலும் எங்கள் மனக்கோவிலில் என்றும் உறைந்திடுவாயம்மா ( கலைகளை அருளிடும் ) சரணம் சுவைமிகு காவியங்கள் படைக்க வைத்தாய் ஊமையாய் இருப்போரையும் பாட வைத்தாய் ஞானம் தந்து எமக்கு அமுதூட்டினாய் கலைகள் சிறந்திட நின்னருள் பொழிந்தாய் ( கலைகளை அருளிடும் ) ஆதிசங்கரருக்கு அருளிய ( சாரதா ) தேவியே சிருங்கேரி பீடத்தின் மஹா ராணியே தூய நின் பதம் வாழ்த்தி வணங்கிடுவோம் ஆய கலைகள் தந்து அருள்புரிவாய் அம்மா ( கலைகளை அருளிடும் )
|
|