|
Post by Amritha Varshini on Jan 14, 2023 5:42:15 GMT 5.5
உ ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
ராகம் - நாத நாமக்ரியா
விருத்தம்
கருணை என்னும் வாரிதியே காஞ்சி நகர் பெரும் தவமே காமகோடி பீடமதன் கதிரொளியே கண்ணொளியால் அருள் வழங்கும் அற்புதமே அருமறைத்தேன் பொழிமுகிலே ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல் தண்ணளியால் காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே பாத மலரே தஞ்சமென்று வந்தடைந்தேன் ஏற்றருளே !!
பல்லவி
காரணமின்றி கருணை புரியும் காஞ்சி பெரியவாளே
அனுபல்லவி
உமை அனுதினமும் தொழுதிட அருள் புரிவாயே
( காரணமின்றி கருணை புரியும் )
சரணம்
அகில நாயகிக்கு தாடங்கம் சூட்டிய பராத்பரன் அன்னை காமாக்ஷிக்கு பொற்கூரை வேய்ந்த தயாபரன் வேதநெறி தழைக்க அறப்பணி செய்த குருபரன் தரணியெல்லாம் திருப்பணி செய்த க்ருபாகரன்
( காரணமின்றி கருணை புரியும் )
ஓர்த்து தெளிந்திடும் ஞான மூர்த்தி வார்த்து வழிகாட்டும் ஒப்பிலா மூர்த்தி பார்த்து மகிழ்ந்திடும் லாவண்ய மூர்த்தி காத்து அருளிடும் கருணா மூர்த்தி
( காரணமின்றி கருணை புரியும் )
|
|