|
Post by Amritha Varshini on Dec 29, 2022 5:49:12 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் - ஹிந்தோளம் - ஏக தாளம்
பல்லவி கைலாயம் விட்டு காஞ்சி வந்தாரடி தோழி சேதி இங்கு அறிந்தேனடி அனுபல்லவி வைகாசி அனுஷத்தில் விழுப்புரத்தில் ரகசியமாய் மீண்டும் ( கைலாயம் விட்டு காஞ்சி வந்தாரடி ) சரணம் புலித்தோல் சூலம் கொண்டார் அங்கே தோழி காஷாய தண்டம் தரித்தார் இங்கே உமையுடன் நடனம் களிப்பார் அங்கே தோழி சுமையுடன் வருவோர்க்கு சுகம் அளிப்பார் இங்கே ( கைலாயம் விட்டு காஞ்சி வந்தாரடி ) வேதப் பொருளே இறங்கி வந்து தோழி வேத ரக்ஷணம் செய்ததம்மா விடமுண்டான் தேவரைக் காக்க தோழி நடமாடும் தெய்வமானார் பக்தரைக் காக்க ( கைலாயம் விட்டு காஞ்சி வந்தாரடி )
|
|