|
Post by Amritha Varshini on Dec 22, 2022 4:40:07 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - வராளி ; ஆதி தாளம்
பல்லவி
அனைத்தும் அறிந்த குருநாதா எனை
அணைத்து நீயும் கண் பாராய்
அனுபல்லவி
தனித்து விளங்கும் குருநாதா எனை
அழைத்து நீயும் அருள் தாராய்
( அனைத்தும் அறிந்த )
சரணம்
அருட்பால் சுரக்கும் காமதேனுவே
நின்னருள் என்றும் பொழிந்திடுவாய்
பொருட்பால் தந்திடும் தயாநிதியே
நின்கிருபை என்றும் நல்கிடுவாய்
( அனைத்தும் அறிந்த )
அழுக்கு மனதை அகற்றிவிடு தூய
எண்ணம் கொண்டு நிரப்பிவிடு
பழுத்த ஞானம் கொடுத்துவிடு
பாங்காய் வாழ்வை அமைத்துவிடு
( அனைத்தும் அறிந்த )
|
|