|
Post by Amritha Varshini on Nov 27, 2022 5:36:25 GMT 5.5
உ
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த் மற்றும் திருமதி சுகன்யா ப்ரேம்குமார்
ராகம் - பாகேஸ்ரீ
பல்லவி
கண்டேன் கண்டேன் கண்டேன் ரமணரை கண்டேன் அருணையில் - நான்
அனுபல்லவி
ஞானியர் வாழும் அண்ணாமலையில் அழகம்மை பெற்ற அருந்தவப் புதல்வரை
( கண்டேன் கண்டேன் )
சரணம்
தென்திசை தோன்றிய தென்முகக் கடவுளாம் இன்முகத் தோற்றத்தில் கருணை புரிவராம்
ஞானத்திரள் ஒளிர் பால யோகியாம் மோன நிலை அருள் ஆத்ம ஞானியாம்
காலனை வென்ற அருட்ஜோதி நீயே ரமணா ரமணா ரமணா என்று உனைத்தேடி
( கண்டேன் கண்டேன் )
|
|