|
Post by Amritha Varshini on Nov 27, 2022 4:57:15 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ஹிந்துஸ்தானி ராகம் ஜெய்ட் (Raag Jait) ; ரூபக தாளம்
பல்லவி
பூரண மதிமுகம் ஒளிர்வதை கண்டேன் காரணமின்றி அவர் கழல் பணிந்தேன்
அனுபல்லவி
வான முகட்டிலும் அவர்முகம் கண்டேன் ஞான தீபமாய் சுடர்விட கண்டேன்
சரணம்
ஆலயத் திருப்பணி செய்ததை அறிந்தேன் குவலயம் காக்க நடந்ததை உணர்ந்தேன் நெற்பொரி உண்டு வாழ்ந்ததை அறிந்தேன் பொற்பதம் கண்டு அகத்தினில் மகிழ்ந்தேன்
( பூரண மதி முகம் )
பற்றறு வாழ்வில் சிறந்திடக் கண்டேன் கற்றுறு மகிமை அறிந்து கொண்டேன் கர்மவினை முற்றும் விலகிடக் கண்டேன் நிர்மலப் பாதம் நாளும் வணங்கி நின்றேன்
( பூரண மதி முகம் )
|
|