|
Post by Amritha Varshini on Nov 22, 2022 5:46:16 GMT 5.5
உ
ஸ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் – திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் – கல்யாணி ; ஆதி தாளம்
பல்லவி
உன்னை அல்லால் வேறேது கதி எனக்கு சற்குருநாதா
அனுபல்லவி
மனக்குறை தீர்த்து உன் கருணை மழை பொழிந்து நல்வழி நடத்தி காத்தருள் புரியவே
( உன்னை அல்லால் )
சரணம்
காம குரோத மோஹாதிகளை பரிபூர்ணமாக அழித்து அறநெறி புகட்டி காத்தருள் புரியவே
அயன் மால் அரனென்று உன் பாதாரவிந்தமதை சரணடைந்தேன் இனியும் சோதிக்காது காத்தருள்வாய்
( உன்னை அல்லால் )
|
|