|
Post by Amritha Varshini on Oct 24, 2022 5:12:28 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி உமா சங்கமேஸ்வரன்
ராகம் - பந்துவராளி / ஆதி தாளம்
பல்லவி
கலவையில் தோன்றிய ஞான தீபமே கவலை நீக்கிடும் எங்கள் குரு பாதமே
சரணம்
நான்மறை காத்திட ஜகத்தினில் உதித்தாய் தான்மறை மார்கமாம் தெய்வத்தின் குரல் தந்தாய் தேனுறைத் தமிழினில் பாட்டிசைக்க வைத்தாய் வானுறை தெய்வமாய் அருள்மழை பொழிந்தாய்
( கலவையில் தோன்றிய )
அனுஷத்தில் நின் நாமம் துதித்திட வேண்டும் அனுக்ஷணமும் உமை நினைத்திட வேண்டும் அனுதினம் நின் புகழ் பாடிட வேண்டும் அனுகிரகம் தந்து எமை காத்தருள வேண்டும்
( கலவையில் தோன்றிய )
|
|