|
Post by Amritha Varshini on Oct 17, 2022 5:23:13 GMT 5.5
உ
மீரா பாய் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி சுபாஷினி ஸ்ரீசைலன்
கீ போர்டு - திரு பிரசன்னா ஸ்ரீசைலன்
ராகம் – ராகமாலிகை (சாருகேசி, ஹம்ஸத்வனி, சுப-பந்துவராளி)
மீராயெனும் பாவையவள் நெஞ்சம்
நீராய் மனம் உருகியது கொஞ்சம்
மாறாத சிந்தனையே அவளை மிஞ்சும்
ஆராவமுதனை அடைந்தாளவள் தஞ்சம்
உள்ளமும் உடலும் கலந்த ப்ரேமரசம்
அள்ளக் குறைவின்றி பெருகும் பக்திரசம்
கள்ளம் கபடமின்றி கலந்த இன்பரசம்
தெள்ளத் தெளிவாக இனிக்கும் நாமரசம்
ஆற்றாமையால் நாடினாள் மாலவனின் பாதம்
ஊற்றுப்போல் பெருகியதே அவளின் கீதம்
மாற்றுக் குறையாத மங்கையவளின் வேதம்
காற்றினிலே கரைந்து கண்ணனைக் கலந்த நாதம்
|
|