|
Post by Amritha Varshini on Oct 12, 2022 5:26:38 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி சுபாஷினி ஸ்ரீசைலன்
கீ போர்டு - திரு பிரசன்னா ஸ்ரீசைலன்
ராகம் – பாகேஸ்ரீ
பல்லவி
உன்னடியாரில் எனையும் ஒருவனாய் கருதலாகாதோ -
காஞ்சி மாமுனியே
சரணம்
மலைபோலே கடமை பெருகி இருந்திட
சிலைபோலே நானும் தயங்கி நின்றிட
விலையின்றி என் மனம் சற்றே துடித்திட
நிலையின்றி நின் ஸன்னிதி அடைந்திட
( உன்னடியாரில் )
தெய்வத்தின் குரல் காதிலங்கே ஒலித்தது
செய்யும் செயல் யாவும் நன்றாய்ப் புரிந்தது
மையல் மயக்கம் விட்டு விலகிச் சென்றது
உய்யும் வழி நன்றாய்த் தானே தெளிந்தது
( உன்னடியாரில் )
|
|