|
Post by Amritha Varshini on Oct 1, 2022 5:51:27 GMT 5.5
உ
அனுஷத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - ஆந்தோளிகா ; ஆதி தாளம்
பல்லவி
இனிய இளவலை பணி மனமே
நடமாடும் தெய்வம் காஞ்சி மாமுனியின்
அனுபல்லவி
சிவ சாகரத்தில் அமுதம் பருகிட
பவ சாகரம் எளிதில் கடந்திட
( இனிய இளவலை பணி மனமே )
சரணம்
கலை நயம் மிகுந்த உத்தமராம்
குவலயம் காக்க வந்தவராம்
அனல் போல் தேகம் கொண்டவராம்
புனலாய் அருள் மழை பொழிபவராம்
( இனிய இளவலை பணி மனமே )
நேர்மையின் உருவம் கொண்டவராம்
பார்வையில் கனிவு தந்தவராம்
துறவியாய் உலகில் வாழ்ந்தவராம்
ஞானியாய் நல்வழி தந்தவராம்
( இனிய இளவலை பணி மனமே )
|
|