|
Post by Amritha Varshini on Sept 23, 2022 5:21:53 GMT 5.5
உ
ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ராமப்பிரியா
விருத்தம்
காஷாய தண்ட கரகாதி விபூஷிதாங்கம்
வைராக்ய பாக்ய ஜலதே கருணாநிதே த்வம்
ஸம்ஸார உபபதிதஸ்ய சமாகுலஸ்ய
போதேந்திர தேவ மம தேஹி கராவலம்பம்
பல்லவி
காமகோடி பீட சற்குருவாம் நலந்தரும்
நாமகோடி உரைத்த நற்குருவாம்
அனுபல்லவி
கலியிலே உய்யும் நல்வழி காட்டினார்
புவியிலே கடைத்தேறிட வழியமைத்தார்
சரணம்
புருஷோத்தமன் எனும் முதல் நாமம்
போதேந்திராள் என்கிற குரு நாமம்
காவேரி நதிதீர ஸ்திர வாசம்
ராம நாமமே சதா ஸ்வாசம்
( காமகோடி பீட சற்குருவாம் ) இடைமருதூர் அருகிலே கோவிந்தபுரம்
நம் யாவர்க்கும் அருளிடும் நாமபுரம்
ராம நாமம் அனுதினம் ஜெபித்திடுவோம்
இகபர லாபமனைத்தும் அடைந்திடுவோம்
( காமகோடி பீட சற்குருவாம் )
|
|