|
Post by Amritha Varshini on Sept 21, 2022 5:23:12 GMT 5.5
உ
சத்குரு ஶ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி நிஹாரிகா ஶ்ரீகாந்த்
ராகம் – ரேவதி
பல்லவி
சதாசிவ நாமம் கொண்ட மெய்ஞானியே சந்திரசேகரர் வாழ்த்தி போற்றிடும் கலைவாணியே
சரணம்
சதாசிவ சாஸ்திரி எனும் பூர்வாஸ்ரம நாமம் சாச்சு என்பதோ அன்பால் அழைக்கும் நாமம் சிவன்சார் என்பது பக்தர்கள் வணங்கிடும் நாமம் ஞானி என்பதே உலகோர் உணர்ந்திட்ட நாமம்
( சதாசிவ நாமம் )
குறையென வருவோரின் சுமையது குறைந்திடும் நிறையென நாளும் மனமது பணிந்திடும் கறையது நீங்கியதால் உளமது ஒடுங்கிடும் இறையின் வழியினிலே தினமது நாடிடும்
( சதாசிவ நாமம் )
|
|