|
Post by Amritha Varshini on Aug 31, 2022 5:28:16 GMT 5.5
உ
பிள்ளையார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – மோஹன கல்யாணி / ஆதி தாளம்
பல்லவி
சதுர்த்தி நன்னாளை கொண்டாடுவோம்
விநாயகனை நாம் வணங்கிடுவோம்
சரணம்
கணப்பொழுது அவனை நினைத்து விட்டால்
கணபதியான் நமைக் காத்திடுவான்
நம்பிக்கையுடன் நாம் துதித்து விட்டால்
தும்பிக்கையான் துணை வந்திடுவான்
( சதுர்த்தி நன்னாளை )
நெற்றியிலே குட்டிக் கொண்டால்
வெற்றியே என்றும் தந்திடுவான் - தோப்புக்
கரணமிட்டு நாம் வழிபட்டால்
வாரணத்தான் நல்வழி காட்டிடுவான்
( சதுர்த்தி நன்னாளை )
|
|