|
Post by Amritha Varshini on Aug 31, 2022 5:25:58 GMT 5.5
உ
பிள்ளையார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி உமா சங்கமேஸ்வரன்
ராகம் – பூர்வி கல்யாணி
பல்லவி
நல்வழி பிறந்திட அருள் புரிவாய் - கணபதியே
உள்ளொளி ஒளிர்ந்திட வரம் தருவாய்
சரணம்
மண்ணால் செய்த உருவம் வாங்கிடுவோம்
கண்ணாரக் கண்டு அலங்காரம் செய்திடுவோம்
விண்ணோரும் மகிழ அர்ச்சனை செய்திடுவோம் - தமிழில்
பண்ணிசைத்து உள்ளம் குளிர்ந்திடுவோம்
( நல்வழி பிறந்திட )
அருகம்புல் பறித்து அர்ச்சனை செய்திடுவோம்
கரும்பும் வெல்லமும் உனக்கு தந்திடுவோம் - கற்பக
தருவாய் நலம்பல நல்கிடுவாய் - கணபதியே
குருவாய் வந்தருள் ஞானமும் தந்திடுவாய்
( நல்வழி பிறந்திட )
|
|