|
Post by Amritha Varshini on Aug 21, 2022 6:06:54 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ஹம்ஸநாதம்
பல்லவி
பெரியவா பொற்பாதமே துணை - மஹா
அனுபல்லவி
அலைந்து திரிந்துழலும் நிலையில்லா
வாழ்க்கையில் நமக்கு எப்போதும்
( பெரியவா பொற்பாதமே துணை )
சரணம்
வேதம் தழைத்திட மேதினியில் எங்கும் - அந்தணர்
நாதம் ஒலித்திட தரணியில் பொங்கும் - நின்
கீதம் இசைத்திட அவனியில் ஓங்கும் - மனம்
பாதம் பற்றிட அமைதியும் நல்கும் – நமக்கு
( பெரியவா பொற்பாதமே துணை )
கோள்கள் யாவும் நன்மை செய்திடும்
நாளும் நல்லவை நமைத் தேடி வந்திடும்
ஆளும் தீமைகள் விலகிச் சென்றிடும் - நின்
தாளைப் பணிந்திட யாவும் நல்கிடும் – நமக்கு
( பெரியவா பொற்பாதமே துணை )
|
|