|
Post by Amritha Varshini on Aug 20, 2022 5:37:36 GMT 5.5
உ
ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ஆபோகி / ஆதி தாளம்
பல்லவி
கருணை ததும்பும் முகமொன்று கண்டேன்
அருணை அருகில் தபோவனம் அடைந்தேன்
அனுபல்லவி
ஸத்குரு ஞானானந்தர் பதமலர் பணிந்தேன்
அருள்வலையில் விழுந்து பேரானந்தம் அடைந்தேன்
( கருணை ததும்பும் )
சரணம்
திக்குத் தெரியாமல் திகைத்தவர்க்கு நல்வழி காட்டினார்
சீரான மார்க்கம் தந்து நமைக் காத்து அருளினார்
பக்தி நெறி பற்றிடும் நன்னெறியைப் புகட்டினார்
முக்தி நெறி நல்கிடும் வழி நமக்கு காட்டினார்
( கருணை ததும்பும் )
இன்முகம் கண்டால் மனக்கவலை பறந்திடும்
பன்முகம் அறிந்தால் இருளங்கே விலகிடும்
இருளது விலகினால் திருவருள் தான் கிட்டிடும்
திருவருள் கிட்டினால் சாந்தி அங்கே நிலவிடும்
( கருணை ததும்பும் )
|
|