|
Post by Amritha Varshini on Aug 7, 2022 5:21:27 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - பிருந்தாவன சாரங்கா ; ஆதி தாளம்
விருத்தம்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்
பல்லவி
விரைந்து வந்தருள் புரிவாய் காஞ்சியில்
உறைந்தருள் புரியும் தவரிஷியே
அனுபல்லவி
அருட்பார்வை கிடைத்திட காத்திருந்தேன்
திருப்பாதமே கதியென்று பணிந்திருந்தேன்
( விரைந்து வந்தருள் புரிவாய் )
சரணம்
அல்லும் பகலும் உனை நினைத்தேன்
அல்லல் நீங்கிட அருள் புரிவாய்
சொல்லும் செயலும் உனை பஜித்தேன்
மாயை விலகிட அருள் புரிவாய்
( விரைந்து வந்தருள் புரிவாய் )
ஞானத்தின் சிகரமாய் உனை கண்டேன்
ஆனந்த நிலை எமக்கு தந்திடுவாய்
கருணைக் கடலாய் உனை கண்டேன்
கடைவிழி எமக்கென்றும் நல்கிடுவாய்
( விரைந்து வந்தருள் புரிவாய் )
நாமாவளி - இயற்றிப்பாடியவர் திருமதி மோஹனா கிருஷ்ணன்
விளையாட இது நேரமா பெரியவா வினை தீர்க்க விரைந்தோடி வா விண்ணில் மின்னும் கதிரவன் போல் மண்ணில் எங்கள் துயர் தீர்ப்பாய் பாதம் துணையென்று வந்தோரை பரிவுடன் காக்கும் ஜகத்குருவே பனிமலை போல் உருகிடும் எங்கள் இதயத்தில் வந்து அமர்ந்திடுவாய்
|
|