|
Post by Amritha Varshini on Aug 1, 2022 5:01:25 GMT 5.5
உ
ஆடிப்பூரம் - ஆண்டாள் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி சுபாஷினி ஸ்ரீசைலன் ஆண்டாள்
கீ போர்டு - திரு பிரசன்னா ஸ்ரீசைலன்
ராகமாலிகா - சாரங்கா / தேஷ் / மத்தியமாவதி
திருவாடிப்பூரமன்று உதித்த பூங்கோதை
திருத்துழாய் தன்னில் மலர்ந்தெழுந்து
மாலவன் பொற்பாதம் தனையடைய
மயிலவள் தோள்தனில் மலர் சூடி
கண்ணனை கள்ளமாய் கவர்ந்திழுக்க
கண்ணாடி முன்நின்று கசிந்துருகி
பாசுரமாம் திருப்பாவை தனைச்செய்து
பாவையரை தந்திரமாய் நோன்புக்கழைத்து
தமிழுக்கு புகழ் சேர்க்கும் பாட்டிசைத்து
தன்னோடு தந்தையையும் சேர்த்திழுத்து
நம்மையும் மார்கழியில் பாடச்செய்து
நம்மனதையும் அறியாமல் கொள்ளையடித்து
அரங்கனே இவள் ஜாலமதில் பித்துப்பிடித்து
அம்மம்மா போதுமுந்தன் திருவிளையாட்டு
|
|