|
Post by Amritha Varshini on Jul 30, 2022 10:17:57 GMT 5.5
உ
திரு அத்திவரதர் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – கானடா
பல்லவி
வரதா வரதா எமக்கு வரம் தா காஞ்சிபுரத்தில் எழுந்தருளும் – அத்தி
சரணம்
அருமறை தேடிடும் பரமனை கருவறை விட்டுறையும் வரதனை ஒருமுறை கண்டிட வேண்டும் - நின்னழகை மருமுறையும் காண வரமருள வேண்டும்
( வரதா வரதா எமக்கு வரம் தா )
நாடிவரும் பக்தர்களின் குறைதீர்க்க வேண்டும் தேடிவரும் அடியார்க்கு அருள்புரிய வேண்டும் வாடிவரும் எளியோர்க்கு வரமருள வேண்டும் பாடிவரும் சிறியேனை அணைத்திட வேண்டும்
( வரதா வரதா எமக்கு வரம் தா )
|
|