|
Post by Amritha Varshini on Jul 24, 2022 5:59:53 GMT 5.5
உ
தமிழ் கடவுளாம் முருகன் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ஷண்முகப்பிரியா
விருத்தம்
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண் குண பஞ்சரனே - கந்தர் அனுபூதி (15)
பல்லவி
செந்தமிழால் வாழ்த்திட வேண்டும் - முருகா உனை பைந்தமிழால் வணங்கிட வேண்டும்
சரணம்
முக்குண நிலை கடந்தருள் முருகேசன் நான்மறை போற்றிப் பாடிடும் ஸுப்ரமண்யன் ஐந்தெழுத்தவன் குருவாய் வணங்கிடும் ஸ்வாமிநாதன் அறுபடையில் அருள் புரிந்திடும் ஆறுமுகன்
( செந்தமிழால் வாழ்த்திட )
ஞானப்பழம் விரும்பிய ஞான பண்டிதன் சூரனை வதம் செய்தருள் செந்தில்நாதன் வள்ளி தெய்வானை மணந்தருள் குமரேசன் அருணகிரி சந்தத்தமிழ் பாடிய குருகுகன்
( செந்தமிழால் வாழ்த்திட )
|
|