|
Post by Amritha Varshini on Jul 19, 2022 16:39:59 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - ஹிந்தோளம் ; ஆதி தாளம்
பல்லவி பாதம் ஸ்மரித்தால் பாபம் தீர்த்திடும் பரமேஸ்வரா நின் பாதம் தொழுது தாபம் நீங்கிட அருள்புரிவாய் சரணம் காரணமின்றி அருள் பொழியும் அன்புருவே உமை பூரணகும்பம் வைத்து நிதம் நாங்கள் அழைத்திடுவோம் உலகம் போற்றும் அகிலநாயகா நிகழும் கலகம் நீங்கி அமைதி நிலவிட அருள்புரிவாய் ( பாதம் ஸ்மரித்தால் பாபம் தீர்த்திடும் ) அனுஷ ஜெயந்தி நிதம் நாங்கள் கொண்டாடுவோம் நிமிஷம் தோறும் மறவாமல் உமை நினைத்திடுவோம் பன்னிரு வயதில் பீடமேற்ற எங்கள் ஜகத்குருவே உன்னிரு விழியால் எமக்கருள் என்றும் பொழிந்திடுவாய் ( பாதம் ஸ்மரித்தால் பாபம் தீர்த்திடும் )
|
|