|
Post by Amritha Varshini on Jul 9, 2022 19:12:54 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - பாகேஸ்ரீ ; ரூபக தாளம்
விருத்தம்
காருண்யாம்ருத வர்ஷிணம் கநவிபத்க்ரீஷ்மச்சிதா கர்மடம் வித்யா ஸஸ்ய பலோதயாய ஸுமன: ஸம்ஸேவ்யமிச்சாக்ருதிம் ந்ருத்யத்பக்த மயூர மத்ரிநிலயம் சஞ்சத்ஜடா மண்டலம் சம்போ வாஞ்சதி நீலகந்தர ஸதா த்வாம் மே மனஸ்சாதக: (சிவானந்தலஹரி – 52)
பல்லவி மலர்ப்பாதம் வணங்கும் நேரமிது நின் திருப்பாதம் தொழும் நற்காலமிது அனுபல்லவி விழி அசைவில் அருள் சுரக்கும் நின் விரல் அசைவில் அருள் பொழியும் ( மலர்ப் பாதம் ) அருள் அலை பெருகியதே நின் சந்நிதியில் இருள் நிலை விலகியதே நின் க்ருபையில் இனம் புரியா இன்பம் எமை சூழ்ந்தது மனம் அறியா ஆனந்த நிலை அடைந்தது ( மலர்ப் பாதம் ) அறத்தின் மறுவடிவான ஞானக்கனலே துறவின் இலக்கணமான அருட்புனலே உள்ளன்பினால் உமை வாழ்த்திட வேண்டும் நற்பண்பினால் சிறந்து விளங்கிட வேண்டும் ( மலர்ப் பாதம் )
|
|