|
Post by Amritha Varshini on Jun 19, 2022 7:02:01 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
ராகம் – மதுவந்தி
பல்லவி
திருவடி நிழலினை தேடி வந்தோம்
குருவடி துணையென்று சரண் புகுந்தோம்
சரணம்
முப்புரம் எரித்த முக்கண்ணன் மீண்டும்
விழுப்புரம் உதித்த ரகசியம் அறிந்தோம்
காலடி உதித்த சங்கரன் மீண்டும்
காலடி பதித்த சரித்திரம் தெரிந்தோம்
( திருவடி நிழலினை )
முன்வினை தீமைகள் முற்றிலும் நீங்கிடும்
பின்வினை அனைத்தும் நன்மை பயத்திடும்
தீவினை அகற்றி பாபம் களைந்திடும்
நல்வினை பெருக்கி புண்ணியம் சேர்த்திடும்
( திருவடி நிழலினை )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|