|
Post by Amritha Varshini on Jun 17, 2022 5:22:46 GMT 5.5
ராமாயண அணில் மாதிரி 2 பேரை என் life timeல் நினைக்கிறேன்
1944 February யில், காஞ்சியில் காமாக்ஷிக்கு கும்பாபிஷேகம் பண்ணினபோது திருநெல்வேலியில் ஏதோ சின்ன கடை வைத்திருந்த ஒருவர் 'என்னால் இதற்கு மேல் பண்ண சக்தி இல்லையே' என்று வருத்தப்பட்டு எனக்கு நீளமா ஒரு கடிதாசு எழுதி ஒரு ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தார்...
இதே மாதிரி இளையாத்தங்குடியில் ரொம்ப பெரிசா முதல் ஸதஸு (1962 ஆகம-சில்ப-வ்யாஸ பாரத-கிராமகலா-வித்வத் ஸதஸ்) நடத்தினபோது மெட்ராஸிலிருந்து ஒருத்தர் 5 ரூபாய் அனுப்பிவைத்து, பெரிய donationகளோடு கூட இந்த அல்பக் காணிக்கையையும் அங்கீகரிக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தார்...
பெரிய donationகள் எல்லாம் மறந்து போனாலும் அந்த ஒரு ரூபாயும், இந்த ஐந்து ரூபாயும் என் மனஸை விட்டு போகவேயில்லை!"
- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா
|
|