|
Post by Amritha Varshini on Jun 12, 2022 17:58:57 GMT 5.5
உ
வைகாசி அனுஷம் ஸ்ரீ மஹாபெரியவா ஜெயந்தி மஹோத்சவத்தை முன்னிட்டு ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் இசையமைத்துப் பாடியவர் - திருமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் - ஜோதிஸ்வரூபிணி / ரூபக தாளம்
விருத்தம்
ச’ரீரம் ஸுரூபம் ததா வா களத்ரம் யச’: சாரு சித்ரம் தனம் மேருதுல்யம் / மன: சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் // ( ஸ்ரீ குரு அஷ்டகம்-1 )
பல்லவி கண்ணோரம் நீர் கசிய நின் பாதம் தொழ வேணும் விண்ணோரும் ஏற்றித் தொழும் சந்நிதி வரவேணும் அனுபல்லவி வன்முறை நீங்கி எங்கும் சாந்தி நிலவ வேணும் பன்முறை பணிவோர்க்கும் நின்னருள் வேணும் ( கண்ணோரம் நீர் கசிய ) சரணம் ஜோதி ஸ்வரூபமாய் எங்கும் ஒளிர் போரொளியே ஆதி அந்தம் இல்லா எங்கும் நிறை தத்துவமே நிதம் பார்த்து ஆனந்தம் கொள்ளும் பொன்னுருவவே துயர் தீர்த்து அடியார்க்கு அருளிடும் அன்புருவே ( கண்ணோரம் நீர் கசிய ) வில்வ இலை எடுத்து அர்ச்சனை செய்திடுவோம் துளசி தளம் எடுத்து மாலைகள் தொடுத்திடுவோம் மணமிகு பூக்களினால் அலங்காரம் செய்திடுவோம் குணமிகு பெருமை போற்ற ஆனந்தமாய் பாடிடுவோம் ( கண்ணோரம் நீர் கசிய )
|
|